மேலும் அறிய

உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற நிலையில், 3 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற நிலையில், 3 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சீகூர் வனபகுதி. இந்த வனப்பகுதியில்  பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கார்த்திகை  தீபம் திருவிழாவிற்காக கோவில் திறக்கபட்டு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக உதகை, கோத்தகிரி, எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர் மற்றும் பேரகணி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர்.


உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு

இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு செல்லும் வன பகுதியில் ஓடும் ஆனிக்கல் ஆற்றைக் கடந்து சென்ற போது, காலையில் தண்ணீர் குறைந்த அளவை ஆற்றில் சென்றுள்ளது. அங்கு அவர்கள் அமர்ந்திருந்த நிலையில் மாலை 6:15 மணியளவில் இந்த ஆறு அமைந்துள்ள மேல்பகுதி மலைகள் மீது பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் ஒவ்வொருவராக தரைப்பாலம் வழியாக ஆற்றை கடக்க முயன்ற போது உதகை ஜெக்கலொரை கிராமத்தை சார்ந்த சரோஜா (65), வாசுகி (45), விமலா (35) மற்றும் சுசிலா (56) ஆகிய 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.


உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு

இதனைப் பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் என  அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதாலும் ஆற்றால் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடுவதாலும் மாயமான 4 பெண்களை இரவு 12:30 மணி வரை தேடினர். ஆனால் யாரும் தென்படாததால் தேடும் பணி காலை முதல் மீண்டும் தொடர தீயணைப்பு துறையினர் முடிவு செய்தனர். 


உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் சடலமாக மீட்பு

இதனிடையே காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 200க்கும் மேற்பட்ட பக்தர்களை அதிகாலை இன்று அதிகாலை 2.30மணி வரை தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றின் நடுவே கயிறு கட்டி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாசுகி, சரோஜா உள்ளிட்ட 3 பேரின் உடல்களை சடலமாக மீட்புக் குழுவினர் மீட்டனர். தொடர்ந்து மற்றொரு உடலை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வந்த 4 பெண் பக்தர்கள் காட்டற்று வெள்ளத்தில் அடித்து சென்று நிலையில், 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
Embed widget