மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வட தமிழ்நாட்டில் முக்கிய கண்டுபிடிப்பு..! வடக்குப்பட்டில் கிடைத்த தமிழ்- பிராமி எழுத்துக்கள்..!
Kanchipuram Excavation: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராட்சியில் தொல்பொருட்கள் கிடைத்துள்ளது.
![வட தமிழ்நாட்டில் முக்கிய கண்டுபிடிப்பு..! வடக்குப்பட்டில் கிடைத்த தமிழ்- பிராமி எழுத்துக்கள்..! vadakkupattu excavation Antiquities have been found in the second phase of excavation in Kanchipuram district next to Oragadam வட தமிழ்நாட்டில் முக்கிய கண்டுபிடிப்பு..! வடக்குப்பட்டில் கிடைத்த தமிழ்- பிராமி எழுத்துக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/07/1f4b21681b56addf335be6c4a525cf491691414586668113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வடக்குப்பட்டு தொல்லியல் தளம்
இதுவரை வட தமிழகத்தில் காஞ்சிபுரம், பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
தங்கம் கிடைத்த வடக்குபட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன. மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் , தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்தது.
![வட தமிழ்நாட்டில் முக்கிய கண்டுபிடிப்பு..! வடக்குப்பட்டில் கிடைத்த தமிழ்- பிராமி எழுத்துக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/07/b60f2cfdebebfea34ed832380bb1243c1691414378863113_original.jpg)
தொல்பொருட்கள்:
இதனை அடுத்து கடந்த , மே மாதம் 19 -ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி துவங்கியது. இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்ட நிலையில், பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 (10மீx10மீ) அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 800 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன்.
![வட தமிழ்நாட்டில் முக்கிய கண்டுபிடிப்பு..! வடக்குப்பட்டில் கிடைத்த தமிழ்- பிராமி எழுத்துக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/07/f4626ef44f8614b5ed9d47acd6f53bf81691414440637113_original.jpg)
பல்வேறு விளையாட்டு பொருட்கள் கண்டுபிடிப்பு
பல்வேறு விளையாட்டு பொருட்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் விளையாடக்கூடிய, வட்டச்சில்லுக்கள், கூம்பு வடிவிலான ஜாடிகள், பானைகளின் வடிவத்தை உருவாக்கும் கருவிகள், பானை ஓடுகள் முத்திரையை ஆகியவை கிடைக்கப்பட்டுள்ளன. தங்கத்திலான சிறு தகடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![வட தமிழ்நாட்டில் முக்கிய கண்டுபிடிப்பு..! வடக்குப்பட்டில் கிடைத்த தமிழ்- பிராமி எழுத்துக்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/07/fbcda6c02d35fe481877e725df7f6b9e1691414483564113_original.jpg)
செம்பிலான குங்குமச்சிமிழ் போல் காட்சியளிக்க கூடிய சிறிய கிண்ணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆணி போன்ற தண்டுப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பல்வேறு கற்களால் செய்யப்பட்ட மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பிராமி எழுத்துக்கள்
இந்நிலையில் தற்போது அகழ்வாய்வில் தமிழ்- பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடு, சுடுமண் பொம்மைகள், கிடைத்துள்ளது. இதுவரை வட தமிழகத்தில் காஞ்சிபுரம், பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ் - பிராமி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளது. எழுத்துப்பொறிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்திருப்பது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு என்று தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் கூடிய பானை ஓடுகள் கிடைத்திருப்பது , கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என தெரியவந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion