மேலும் அறிய

விழுப்புரம்: ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் 30 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

’’30 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார் என்பவருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்’’

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய்புதூரை சேர்ந்தவர் ராஜா (30). இவர் அதே பகுதியில் ஊறுகாய் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ஆம் தேதி இவரும், அவருடன் காசாளராக பணியாற்றி வரும் சிபிசக்கரவர்த்தியும் (28) தொழில் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மரக்காணம் பகுதிக்கு ஒரு காரில் புறப்பட்டனர். திண்டிவனத்தை அடுத்த பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், அந்த காரை திடீரென வழிமறித்து கார் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கியதோடு கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்து 30 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

விழுப்புரம்: ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் 30 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த ஊறுகாய் கம்பெனியில் பணியாற்றி ஏற்கனவே பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (25), மணிகண்டன் (20), தற்போது ஊறுகாய் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வரும் மனோஜ்குமார் (27) மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட சென்னை சிட்டி ஆயுதப்படை காவலரான சென்னை புதுப்பேட்டை சாமி தெருவை சேர்ந்த செல்வக்குமார் (46) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விழுப்புரம்: ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் 30 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

 

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பணிநீக்கம் செய்யப்பட்ட  காவலர்  செல்வக்குமார், பன்னீர்செல்வம், மனோஜ்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரையும் கடந்த 18-ந் தேதியன்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் செல்வக்குமார், ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சென்னையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருடன் நட்பு ஏற்பட்ட சென்னை கோவூரை சேர்ந்த வேணுகோபால் மகன் கூலிப்படை தலைவனான திலீப் (27) என்பவர் மூலம் பணம் பறித்தது தெரியவந்தது. திலீப்புக்கு செல்வக்குமார் வகுத்து கொடுத்த திட்டத்தின் கீழ் திலீப், தனது கூட்டாளிகள் 5 பேருடன் பெருமுக்கல் பகுதியில் ராஜாவின் காரை வழிமறித்து கத்திமுனையில் பணத்தை பறித்து சென்றனர்.


விழுப்புரம்: ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் 30 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்  செல்வக்குமார், மனோஜ்குமார், பன்னீர்செல்வம், மணிகண்டன் ஆகியோர் சென்னைக்கு காரில் சென்று திலீப்பை சந்தித்து தங்களுக்கு சேர வேண்டிய பங்கு தொகையான 9 லட்சத்தை பெற்றனர். தங்கள் சதித்திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் அதை மதுபானம் அருந்தி கொண்டாடுவதற்காக 4 பேரும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட போது திண்டிவனம் பகுதியில் 4 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்த 9 லட்சம் மற்றும் காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்: ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் 30 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை தலைவனான திலீப் மற்றும் அவனது கூட்டாளிகள் 5 பேரை தனிப்படை போலீசார், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே கைதான செல்வக்குமார் கொடுத்த தகவலின்பேரில் சென்னையில் பதுங்கியிருந்த திலீப் மற்றும் அவரது கூட்டாளியான சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த இளையகுமார் மகன் அஜில்குமார் (19) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து பிரம்மதேசத்திற்கு அழைத்து வந்தனர்.

விழுப்புரம்: ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் 30 லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததோடு திலீப்பிடம் இருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம்,  2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் அஜில்குமாரிடம் இருந்த  70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, திலீப், அஜில்குமார் ஆகிய இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான கூலிப்படை தலைவன் திலீப் மீது ஆவடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு காவல்  நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
Embed widget