மேலும் அறிய

தென்காசி : இன்ஸ்டாகிராம் காதல் வலையில் சிக்கிய இளம் பெண். வீடியோ மிரட்டல் , இளம் பெண் தற்கொலை

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர் வீடியோ வெளியிட்டதால் மன உளைச்சலில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவால் , அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்துார் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 26 ) இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. தம்பதி இடையே குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. முத்துலட்சுமி தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.

அதிகாலையில் முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலங்குளம் போலீசார் விசாரணையில் , முத்துலட்சுமிக்கு , பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரியை சேர்ந்த நபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்ததும் , இருவரும் இணைந்து வீடியோ எடுத்ததும் , அதை அடிப்படையாக கொண்டு அந்த நபர் பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது.

முத்துலட்சுமி தன் நகைகளை விற்று 4 லட்சம் ரூபாய் வரை அந்த நபருக்கு கொடுத்துள்ளார். அவர்கள் பழகிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் அவமானத்தில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், மருதம்புத்துாரை சேர்ந்த சிலரது பெயர்களை குறிப்பிட்டு தற்கொலைக்கு துாண்டியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலை

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த பிரகாஷ் ( வயது 24 ) என்பவரும் கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த கார்த்திக் ( வயது 21 )  என்பவரும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் கார்த்திக் தரப்பை சேர்ந்த சிலரை பிரகாஷ் தாக்கியுள்ளார்.

பிரகாஷ் தரப்பினரை தாக்கும் முயற்சியில் கார்த்திக் தரப்பினர் ஈடுபட்டனர். தாளமுத்துநகரில் உள்ள பிரகாஷ் வீட்டிற்கு கத்தி , அரிவாளுடன் சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த சிசி டிவி கேமராக்களை உடைத்துள்ளது. மேலும் கிருஷ்ணராஜபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகராஜ் ( வயது 18 )  அவரது நண்பர் முகில் ( வயது 19 )  ஆகியோரை மர்ம கும்பல் திடீரென தாக்கியது.

முகில் தப்பியோடிய நிலையில் , நாகராஜை கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பியோடியது. நாகராஜ் உயிரிழந்தார். துாத்துக்குடி வடபாகம் போலீசார் சுந்தரவேல்புரத்தை சேர்ந்த கார்த்திக் ( வயது 21 ) ஹரிகரன் ( வயது 23 ) மற்றும் 17 வயது நான்கு சிறார்களை கைது செய்தனர்.

மனைவி நடத்தையில் சந்தேகம் , கொலை செய்து விட்டு தலைமறைவான கணவர்

நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் ( வயது 45 ) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சித்ரா ( வயது 38 ) தம்பதியருக்கு ஜெகதீசன் ( வயது 17 )  தினேஷ் ( வயது 13 ) என இரண்டு மகன்கள் உள்ளனர். பாஸ்கருக்கு சித்ராவின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளது. இதனால் குடித்து விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கணவரின் கொடுமை தாங்காமல் , ஓராண்டுக்கு முன் சித்ரா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சமாதானம் செய்து அழைத்து வந்த பாஸ்கர் , ஏழு மாதமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். மீண்டும் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த பாஸ்கர், தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

வழக்கம் போல் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மகன்கள் இருவரும் , ஒரு அறையில் தூங்கியுள்ளனர். காலையில் மகன் ஜெகதீசன் எழுந்து பார்த்த போது, சித்ரா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு , சடலமாக கிடந்தார். நாமக்கல் போலீசார் தலைமறைவான பாஸ்கரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!
”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Ajith Seeman: “நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
“நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
Embed widget