மேலும் அறிய

Smart Kavalar App : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்த மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்த 'ஸ்மார்ட் காவலர்' ஆப்.. இதில் இத்தனை விஷயங்களா?

தமிழ்நாடு காவலர்களின் செயல்திறனை மேம்படுத்த சர்வதேச தரத்திலான ‘ஸ்மார்ட் காவலர்’ செயல்பாட்டுக்கு வந்தது

காவல்துறை ரோந்துப்பணியை நவீனப்படுத்த ஸ்மார்ட் காவலர் (E - beat)  என்ற செயலியை காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் காவலர் செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.

Smart Kavalar App : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்த மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்த 'ஸ்மார்ட் காவலர்' ஆப்.. இதில் இத்தனை விஷயங்களா?
 
தமிழ்நாட்டில் முதல்முறையாக..
 
இதனை அடுத்து தமிழ்நாட்டில் முதல் முறையாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஸ்மார்ட் காவலர் (E - beat)  என்ற செயலியை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மூன்று காவல் நிலையங்களில் , சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு நகர காவல் நிலையம், மதுராந்தகம் காவல் நிலையம் மற்றும் மகாபலிபுரம் காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களில், காவலர் ஸ்மார்ட் செயலி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 
 
செயலியில் என்ன இருக்கும் ?
 
குற்றம் நடைபெறும் இடங்கள், காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு வெளியூர் செல்பவர்களின் வீடுகளின் முகவரி, ரவுடிகளின் தங்கும் இடங்கள் ஆகியவை அந்த செயலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும், தினமும் காவலர்கள் அந்த பகுதிக்கு ரோந்து சென்று கண்காணிக்கிறார்களா, என்பது குறித்து இந்த செயலி லொகேஷன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.

Smart Kavalar App : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்த மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்த 'ஸ்மார்ட் காவலர்' ஆப்.. இதில் இத்தனை விஷயங்களா?
 
கண்காணிப்பை  எளிமையாக்கும்...!
 
இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகர காவல் பகுதியில், 62  கண்காணிப்பு பகுதிகளும், குற்றம் சம்பவம் நடைபெறலாம் என்ற பகுதிகள் 50 இடங்களும் இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுராந்தகத்தில் 48 இடங்களும் , மகாபலிபுரத்தில் 36 இடங்களும்  செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் இரவு பணிக்கு அமர்த்தப்படும் காவலர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டும் பணியை சரியாக செய்கிறார்களா , காவலர்கள் எங்கெங்கே சென்றார்கள் என்பது குறித்த விவரம் , மறுநாள் காலை டேஷ்போர்டு  என்ற பகுதியில், அறிக்கையாக உயர் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கும், இதன் மூலம் காவலர் ஒருவர், பணியை சரியாக செய்யவில்லை என்றால், உடனடியாக கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க எளிமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Smart Kavalar App : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்த மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்த 'ஸ்மார்ட் காவலர்' ஆப்.. இதில் இத்தனை விஷயங்களா?
 
காவலர்களுக்கு எப்படி உதவும் ?
 
ஒரு பெரிய குற்றச்செயல் நடைபெறுகிறது என எடுத்துக் கொள்வோம், அதனை சமாளிக்க போதிய காவலர்கள் இல்லை என்றால், எமர்ஜென்சி என்ற பொத்தனை அழுத்தினால், அருகில் இருக்கும் காவலர்களுக்கு இந்த செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்படும், உடனடியாக அப்பகுதிக்கு மற்ற காவலர்கள் சென்று நடவடிக்கை எடுக்க இது உதவும்.
 
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
 
இந்த  காவலர் ஸ்மார்ட் செயலியில், ஸ்மார்ட் காவலர் (E-Beat)செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப் பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவி தேவைப்பட்டாலோ அதுகுறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இந்த செயலி இருக்கும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த வெளியீட்டு விழாவில், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பரத் மற்றும்  துரைப்பாண்டி , காவல் ஆய்வாளர்கள் வடிவேல் முருகன், ருக்மாங்கதன், தர்மதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
Embed widget