மேலும் அறிய

முழுக்கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம்- விவசாயத்திற்கு நீர்த்திறக்க கோரிக்கை

ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50  அடியை எட்டிய நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.  இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வரும். கீழனியில் இருந்து , வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

முழுக்கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம்- விவசாயத்திற்கு நீர்த்திறக்க கோரிக்கை

இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில்  40 கனஅடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும். அதன்படி கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியை எட்டியதால் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து சென்ற வாரம் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டுவருகிறது.

முழுக்கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம்- விவசாயத்திற்கு நீர்த்திறக்க கோரிக்கை

கீழணையில் இருந்து தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வருவதால் மூன்று நாட்களுக்கு முன் 46 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று  தனது முழு கொள்ளவான 47.50  அடியை எட்டியது. ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது, ஆனாலும்  பாசனவாய் கால்களின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை, இதனிடையே பூதங்குடி வி.என்.என் மதகு திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் வெள்ளாறு அணைக்கட்டில் சேமித்து வாலாஜா ஏரிக்கு அனுப்பும் பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்று வருகின்றனர், மேலும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைத்து சென்னிநத்தம், கிளாங்காடு, சக்தி வினாகள் ஆகிய மூன்று கிராமங்கள் பயன்பெறும் வகையில் வெள்ளாற்றில்  தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் மூன்று கிராமங்களும் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்திற்கு என தண்ணீர் திறக்காதது ஏமாற்றம் அளித்துள்ளது.

முழுக்கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம்- விவசாயத்திற்கு நீர்த்திறக்க கோரிக்கை 

ஆனாலும்  வெகு நாட்களுக்கு பிறகு ஏரி நிரம்பியது  தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஏரியை சுற்றியுள்ள விவசாய பெருமக்கள் மதிழ்ச்சி தெரிவித்தனர், இருப்பினும் தண்ணீர் பாசனத்திற்கென திறந்து விடப்பட்டால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என கூறினர். இந்த ஏரியின் பாசன வசதியால் இந்த ஏரியை சுற்றியுள்ள சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள்  பாசன வசதி பெறுகிறது இதனால் இந்த ஏரியானது சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியமான பாசன நீர் ஆதாரமாக உள்ளது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget