மேலும் அறிய

கொளுத்தும் வெயில்: சுற்றுலாவுக்கு பறக்கும் மக்கள்! விமான நிலையத்தில் நிரம்பி வழியும் கூட்டம்!

சென்னை விமான நிலையத்தில், கோடைகால  விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட தொடங்கியுள்ளது.

கோடை  விடுமுறை

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதை போல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்பட்டுள்ளது. மேலும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களில் பலர், குழந்தைகளுடன் வெளியூர்   சுற்றுலாக்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.  ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போதும், இதை போல் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், பயணிகள் வசதிக்காக கூடுதல் விமான சேவைகள் இயக்குவதும் வழக்கமாக நடந்து வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டு கோடை விடுமுறையை, பயணிகள் சந்தோஷமாக கழிப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில், கோடைகால  விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட தொடங்கியுள்ளது. 
 
சென்னை- தூத்துக்குடிக்கு, இதுவரை 3 புறப்பாடு விமானங்கள், 3 வருகை விமானங்கள், 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 4 புறப்பாடு, 4 வருகை என்று 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதைப்போல்  திருச்சிக்கு இதுவரை,4 புறப்பாடு, 4 வருகை, 8 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 6 புறப்பாடு, 6 வருகை என்று 12 விமானங்கள் நாளொன்றுக்கு இயக்கப்படுகின்றன. கோவைக்கு இதுவரை தினமும் 6  புறப்பாடு, 6 வருகை விமானங்கள், 12 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 8 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள், 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன.  மதுரைக்கு இதுவரையில்  5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் 10 விமானங்கள், இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள், 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 
 
அதைப்போல் அண்டை மாநிலங்களான பெங்களூருக்கு இதுவரையில் நாள் ஒன்றுக்கு, 8 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள், 16 விமானங்கள் இயக்கப்பட்டன. இப்போது 11 புறப்பாடு விமானங்கள், 11 வருகை விமானங்கள் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத்துக்கு இதுவரை 10 புறப்படு விமானங்கள், 10 வருகை விமானங்கள் 20 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது 14 புறப்பாடு விமானங்கள், 14 வருகை விமானங்கள், 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 
 

பயணிகள் விமானம்

 
இதைப்போல் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை- துர்காப்பூர் இடையே, புதிதாக வாரத்தில்  3 நாட்கள்,  நேரடி விமான சேவைகள், வரும் மே 16 ஆம் தேதி முதல்  தொடங்கப்படுகின்றன. அதைப்போல் சென்னை- பாரீஸ்-சென்னை இடையே, ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம், இதுவரையில் வாரத்திற்கு 3 நாட்கள், விமான சேவைகளை இயக்கி வந்தது. ஆனால் இந்த கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இனிமேல் வாரத்திற்கு 5 நாட்கள், இந்த விமான சேவை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்குக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மே 15 ஆம் தேதியில் இருந்து, நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை போல் சிறந்த சுற்றுலா தளமான மொரிசியஸ் தீவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த ஏர் மொரிசியஸ் பயணிகள் விமானம், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் ஓட தொடங்கியுள்ளன.
 

ஒன்றரை லட்சம் பயணிகள்

 
இவைகள் தவிர சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. இதைப்போல் இந்த கோடை ஸ்பெஷல் விமானங்களாக, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் சுமார் 40 -க்கும் மேற்பட்ட கூடுதல் மற்றும் புதிய விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த தகவல், கோடை வெப்பத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, குளுமையை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் சென்னை விமான நிலையத்தில்,கடந்த  2023 ஆம் ஆண்டு மே மாதத்தில்,  பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 18,90,638. ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 17,42,607. சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள், கடந்த 2022 ஆம் ஆண்டை விட, 2023 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு சுமார் 3 லட்சம் வரை அதிகரித்து, இந்த ஆண்டு மே மாதத்தில், சுமார் 21 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
 

இட நெருக்கடி ஏற்படவில்லை

 
அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 11,405. ஆனால் 2023 ஆம் ஆண்டு மே மாதம் இயக்கப்பட்ட விமானங்களின்  எண்ணிக்கை 11,708. விமானங்களில் எண்ணிக்கை கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு மே மாதம் 303 விமானங்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் சுமார் 400 விமானங்கள் வரை அதிகமாக இயக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க, வெளியூர் செல்லும் பயணிகள் இடையே, உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. அதோடு கூடுதல் விமானங்கள் அதிகமாக இயக்கப்படுவதால், விமானங்களில் இட நெருக்கடியும் ஏற்படவில்லை, அதைப்போல் அதிக அளவில், கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படவில்லை. இது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
Embed widget