மேலும் அறிய

வெள்ளத்திலிருந்து விடிவு காலம்... சென்னையில் வருகிறது ஸ்பாஞ்ச் பூங்கா... அப்படியென்றால் என்ன?

சென்னை வடபழனி கோயில் தண்ணீர் தொட்டியில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் அங்கு நீர் தேக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிங்காரச் சென்னைத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்தது. அதன்படி சென்னையின் அடிப்படை கட்டமைப்புகளை சீர் செய்து ஹை டெக் நகரமாக தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தான் சென்னையில் “ஸ்பாஞ்ச் பூங்கா” அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்து உள்ளது. சென்னை கார்கில் நகரில் செயற்கை குளம், ஏராளமான மரங்களை கொண்ட ஸ்பாஞ்ச் பூங்காவை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது. கொசஸ்தலை ஆறு பகுதியில் செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த புயல், வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் இது கொண்டு வரப்பட உள்ளது. அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் உள்ள டேனர் பூங்காவை மாதிரியாகக் கொண்டு இந்த ஸ்பாஞ்ச் பார்க் அமைக்கப்படும்.

வெள்ளத்திலிருந்து விடிவு காலம்... சென்னையில் வருகிறது ஸ்பாஞ்ச் பூங்கா... அப்படியென்றால் என்ன?

ஸ்பாஞ்ச் பார்க் என்றால் என்ன? என்ற கேள்வி உங்களில் பலருக்கும் எழுந்திருக்கும். SPONGE என்றால் தமிழில் பஞ்சு என்று நாம் அறிந்திருப்போம். பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ அதுபோல், இதன் பெயரை கொண்டு அமைக்கப்படும் பூங்காக்கள் மழைக் காலங்களில் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதிகளவில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், வெள்ள நீர் விரைந்து வடிவதற்கும் இந்த ஸ்பாஞ்ச் பார்க் உதவும். உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஸ்பாஞ்ச் பூங்காவின் கட்டமைப்பு:

  • கட்டிடங்கள் நிறைந்த நகரப்புறங்களில் பெய்யும் மழை நீரை தேங்கவிடாமல் சேகரித்து, சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
  • ஸ்பாஞ்ச் பூங்காவுக்கு அமைக்கப்படும் தொட்டியில் கூழாங்கற்கள், மணல் கொண்ட அடுக்குகள் இருக்கும். அதன் மத்தியில் இயற்கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்படும்.
  • எந்த வித கான்கிரீட் கட்டுமானங்களும் இல்லாத ஒரு செயற்கையான ஈரநிலமாக இது அமைக்கப்படும்.
  • தண்ணீரை சேகரிக்க ஆங்காங்கே குளங்கள் அமைக்கப்படும்.
  • பூங்காவில் அமைக்கப்படும் குளங்களை சுற்றி தண்ணீரை வேகமாக உறிஞ்ச ஏராளமான மரங்கள் நடப்பட்டு செயற்கை மழைக்காடு போல் உருவாக்கப்படும்.
  • இதனால் எப்போதும் குளிர்ச்சியான சூழலைத் தரும் ஸ்பாஞ்ச் பூங்கா, கோடைக்காலங்களில் மக்கள் இளைப்பாறுவதற்கு பயன்படும்.

வெள்ளநீரை சேகரிக்க கான்கிரீட் டேங்குகளை அமைப்பதற்கு பதில் புதிய தொழில்நுட்பமான ஸ்பாஞ்ச் பூங்காவை சென்னையில் பயன்படுத்தினால் நிச்சயம் பயன்தரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ”இதில் அமைக்கப்படும் மழை பூங்காக்கள் 48 மணி நேரத்துக்குள் வெள்ளநீரை முழுமையாக உறிஞ்சிவிடும். இதனை வளர்ப்பதற்கும் போதிய உரங்கள் தேவைப்படாது. முதல் ஆண்டை தவிர்த்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இதற்கான பராமரிப்பு செலவும் அதிகம் இருக்காது” என அவர்கள் கூறுகின்றனர்.

”சென்னை வடபழனி கோயில் தண்ணீர் தொட்டியில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் அங்கு நீர் தேக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது.” என்கிறார் மழை நீர் சேகரிப்பு நிபுணர் ஆர்.ஆர்.சிவராமன்.

2015-ல் சென்னையை புரட்டிப்போட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகும் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் சென்னையில் வெள்ளநீர் தேக்கம் என்பது தொடர்கதையாகி வரும் சூழலில் இந்த ஸ்பாஞ்ச் பூங்கா திட்டம் புதிய நம்பிக்கையை தரும் வகையில் இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Embed widget