மேலும் அறிய

லேப்டாப் கொண்டு செல்வதைத் தடுத்த அதிகாரி.. போலீசாருக்கும், அமைச்சர் பி.டி.ஆருக்கும் நடந்த வாக்குவாதம்..

தூத்துக்குடி செல்ல வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப்கள் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை  உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடி செல்வதற்கு வந்தாா். அப்போது பாதுகாப்பு சோதனை பிரிவில்  அமைச்சரின் கைப்பையை ஸ்கேன் மூலம்  மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் ஒருவர் பரிசோதித்தாா்.

லேப்டாப் கொண்டு செல்வதைத் தடுத்த அதிகாரி.. போலீசாருக்கும், அமைச்சர் பி.டி.ஆருக்கும் நடந்த வாக்குவாதம்..
அமைச்சரின் கைப்பையில் 2 லேப்டாப்கள் வைத்திருந்தாா். அதை பாா்த்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா்,அமைச்சரிடம் 2 லேப்டாப்களை ஏன் எடுத்துச்செல்கிறீா்கள்? என்று கேட்டாா். உடனே அமைச்சா் நான் மாநில நிதி அமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்து செல்கிறேன்.  விமான நிலையத்தில் 2 லேப்டாப்கள் எடுத்து செல்ல கூடாது என சட்டம் உள்ளதா என்றாா். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

லேப்டாப் கொண்டு செல்வதைத் தடுத்த அதிகாரி.. போலீசாருக்கும், அமைச்சர் பி.டி.ஆருக்கும் நடந்த வாக்குவாதம்..
இதையடுத்து அமைச்சரும் வாக்குவாதம் செய்தாா். மேலும் அந்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் சரியாக புரியவில்லை. இந்தி மட்டுமே பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சரும் இந்தியில் வாக்குவாதம் செய்தாா். 2 லேப்டாப்களை நீங்களே வைத்து கொள்ளூங்கள். விமானத்திற்கு நேரம் ஆகிறது என கூறி செல்ல முயன்றார்.


லேப்டாப் கொண்டு செல்வதைத் தடுத்த அதிகாரி.. போலீசாருக்கும், அமைச்சர் பி.டி.ஆருக்கும் நடந்த வாக்குவாதம்..
இதுகுறித்து தகவலறிந்த விமானநிலைய உயா் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்து அமைச்சரை சமாதானப்படுத்தினா். அப்போது அமைச்சா், அதிகாரிகளிடம் பயணிகளுக்கு உதவி செய்ய தான் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனா். அவா்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக அல்ல. பயணி ஒருவா் 2 லேப்டாப் விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்று எதாவது விதிமுறை உள்ளதா என்று கேட்டாா். அதற்கு அப்படி எந்த விதிமுறையும் கிடையாது என்று கூறி  நடந்த சம்பவத்திற்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டனா்.

லேப்டாப் கொண்டு செல்வதைத் தடுத்த அதிகாரி.. போலீசாருக்கும், அமைச்சர் பி.டி.ஆருக்கும் நடந்த வாக்குவாதம்..
அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரும் மன்னிப்பு கேட்டாா். அமைச்சா் சமாதானமாகி விமானத்தில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றாா். இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் ஒருவா் திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு சோதனை பிரிவில் மொழி பிரச்னை செய்தாா். அது பெரும் சா்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget