மேலும் அறிய

''வெயிட் பண்ணுங்க.. இன்னொரு பாடி வரட்டும்'' - அமரர் ஊர்தியின் அலட்சிய பதிலால் 8 மணி நேரம் காத்திருந்த உடல்

வார்டில் இறந்து கிடந்த சின்னபாப்பாவை சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக அகற்றாமல் வார்டியேலே விட்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் வார்டில் உள்ள நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சின்னபாப்பாவின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றியுள்ளனர்.

காலையில் இறந்தவர் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல அமரர் ஊர்தி இல்லாமல், 8 மணி நேரத்திற்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பகுதியை சேர்ந்தவர் சின்னபாப்பா(60) . இவர் கடந்த 3 தினங்களுக்கு முன் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் இன்று (22.05.2021) காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியை பதிவு செய்த நிலையில் 8 மணி நேரம் ஆகியும் அமர் ஊர்தி வராததால் , இறந்தவரின் சடலத்தை வார்டில் வைத்து கொண்டு அவதிப்பட்டுள்ளனர்.


'வெயிட் பண்ணுங்க.. இன்னொரு பாடி வரட்டும்'' - அமரர் ஊர்தியின் அலட்சிய பதிலால் 8 மணி நேரம் காத்திருந்த உடல்

மேலும் வார்டில் இறந்து கிடந்த சின்னபாப்பாவை சுமார் 7 மணி நேரத்திற்க்கு மேலாக அகற்றாமல் வார்டிலேயே விட்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் வார்டில் உள்ள நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சின்னபாப்பாவின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பருகூர் வரை ஒரே உடலை எடுத்த செல்ல முடியாது இன்னோரு உடல் இருந்தால் தான் பருகூர் போக முடியும்  என அமரர் ஊர்தி ஓட்டுனரும், நிர்வாகத்தினரும் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். காலை முதல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்களை  அலைக்கழித்துவருவதாக உறவினர்கள் குற்றச்சாட்டி மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனையடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பருகூர் அனுப்பிவைக்கப்பட்டது.

'வெயிட் பண்ணுங்க.. இன்னொரு பாடி வரட்டும்'' - அமரர் ஊர்தியின் அலட்சிய பதிலால் 8 மணி நேரம் காத்திருந்த உடல்

இது குறித்து அரசு அமரர் ஊர்திகளின் பொறுப்பாளர் வெங்கடேஷை தொடர்பு கொண்டு கேட்ட போது, ’’அதிக இறப்பு காரணமாக அமரர் ஊர்தி வாகனங்கள் வெளியில் சென்றுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. போதிய வாகனம் இல்லாததாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன பற்றாக்குறையால் அதிக தூரம் ஒரே உடலை கொண்டு செல்லும் போது வழியில் மற்றோரு உடலையும் கொண்டு செல்வது தாங்கள் கடைபிடிக்கும் சாதாரண நடைமுறை தான் என்றும் விளக்கம் கூறினார். சம்பவம் நடக்கும் பொழுது மருத்துவமனை வளாகத்தில் அமரர் ஊர்தி எதுவும் இல்லை என்றும்   வாகனம் வந்த உடனே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள வேலையில் , இறந்தவரின் உடலை 7  மணி நேரத்துக்கும் மேலாக மற்ற நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டிலே காக்கவைத்த சம்பவம் , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தலைப்பு செய்திகள்

15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
Chennai power cut: சென்னையில் நாளை (11-7-2026) எங்கு மின்தடை இருக்கும்? எத்தனை மணி நேரம்?
சென்னையில் நாளை (11-7-2026) எங்கு மின்தடை இருக்கும்? எத்தனை மணி நேரம்?
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget