மேலும் அறிய

Rain water ; வீடுகளில் மழை நீர் வடிகால் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் ?

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களின் அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை காண்போம்

மழை நீர் சேகரிப்பு திட்டம் என்றால் என்ன ?
 
மழை நீர் சேகரிப்பு திட்டம் என்பது பெய்யும் மழைநீரை வீணாக ஓடவிடாமல் சேமித்து , நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் , வறட்சியைத் தடுக்கவும் , மற்றும் அன்றாட உபயோகத்திற்குப் பயன்படுத்தவும் உதவும் ஒரு நிலையான நடைமுறையாகும். இது நகர்ப்புற நீர் பற்றாக் குறைக்குத் தீர்வளிப்பதோடு , மழை வெள்ளத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 
 
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ; 
 
1. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் ,  மழைநீரை நேரடியாக நிலத்திற்குள் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரங்கள் செறிவூட்டப்படுகின்றன. 
 
2. நீர் பற்றாக் குறையை சமாளித்தல் ,  மழைநீர் சேகரிப்பு மூலம் கிடைக்கும் நீரை கோடைகாலத்திலும் , அன்றாட வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். 
 
3. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல் , 
மழைநீர் நிலத்தில் தேங்கி வெள்ளத்தை ஏற்படுத்துவதை தடுக்கும். 
 
இது மட்டுமில்லாமல் , சேகரிக்கப்படும் மழைநீரை குடிநீராக அல்லாமல் , கழிப்பறைகள் , சலவை மற்றும் துணி துவைத்தல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
 
மேலும் , வறட்சியைத் தடுத்து நீர்வள ஆதாரங்களை ஆதரிக்கிறது , நீர் சுத்திகரிப்புச் செலவைக் குறைக்கிறது , நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறையை அளிக்கிறது. 
 
மழை நீர் சேகரிப்பு கட்டாயம்

தமிழகத்தில் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகளை அமைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதன்படி புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் புதிய கட்டடங்களில் இது போன்ற வசதிகள் இருந்தால் மட்டுமே பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என்ற விதி உள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் , ஒப்பந்ததாரர்கள் இது விஷயத்தில் கவனமாக செயல்படுகின்றனர்.

ஆனால் , புதிய கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தனி வீடுகள் நிலையிலும் , இதில் உரிமையாளர்கள் அலட்சியத்துடன் செயல்படுவது மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படும் போது தான் தெரிய வருகிறது.

குறிப்பாக புதிய வீடு வாங்கியவர்கள் அதை பயன்படுத்தும் நிலையில் , வடிகால் வசதிகளில் அடைப்பு போன்ற பிரச்னைகள் வராத நிலையில் அதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அதிக மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறாமல் கட்டடத்தில் சேர்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக கட்டடங்களில் மேல் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மொட்டை மாடிக்கான கட்டுமான பணியின் போதே, தண்ணீர் வெளியேறுவதற்கான வாட்டம் முறையாக இருக்க வேண்டும்.

இத்துடன் மொட்டை மாடியில் சேரும் தண்ணீர் எவ்வித தடையும் இன்றி உடனுக்குடன் வெளியேற வழிசெய்ய வேண்டும். இதற்கான குழாய்கள் இணையும் இடங்களில் உடைப்பு உள்ளிப்ப பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். மொட்டை மாடியில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீர், நிலத்தில் இறங்க முறையான மழை நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நீர் உறிஞ்சு குழாய்கள் சாதாரணமாக, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

இதே போன்று நீர் உறிஞ்சு குழிகளில் இருந்து தண்ணீர் நிலத்தில் இறங்கும் வசதி அல்லது கிணற்றில் இறங்கும் வசதி ஆகியவற்றிலும் முறையான பராமரிப்பு அவசியம். இத்துடன் உங்கள் வீட்டை சுற்றி மழைக்காலத்தில் அதிக நேரம் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சாலையில் உள்ள மழை நீர் வடிகால்களுக்கு உரிய இணைப்பை ஏற்படுத்தி , வீட்டில் இருந்து உபரி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
SENTHIL BALAJI vs TVK : கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
TNEB Employees Allowance: மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Embed widget