மேலும் அறிய

Rain water ; வீடுகளில் மழை நீர் வடிகால் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் ?

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களின் அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை காண்போம்

மழை நீர் சேகரிப்பு திட்டம் என்றால் என்ன ?
 
மழை நீர் சேகரிப்பு திட்டம் என்பது பெய்யும் மழைநீரை வீணாக ஓடவிடாமல் சேமித்து , நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் , வறட்சியைத் தடுக்கவும் , மற்றும் அன்றாட உபயோகத்திற்குப் பயன்படுத்தவும் உதவும் ஒரு நிலையான நடைமுறையாகும். இது நகர்ப்புற நீர் பற்றாக் குறைக்குத் தீர்வளிப்பதோடு , மழை வெள்ளத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 
 
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ; 
 
1. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் ,  மழைநீரை நேரடியாக நிலத்திற்குள் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரங்கள் செறிவூட்டப்படுகின்றன. 
 
2. நீர் பற்றாக் குறையை சமாளித்தல் ,  மழைநீர் சேகரிப்பு மூலம் கிடைக்கும் நீரை கோடைகாலத்திலும் , அன்றாட வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். 
 
3. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல் , 
மழைநீர் நிலத்தில் தேங்கி வெள்ளத்தை ஏற்படுத்துவதை தடுக்கும். 
 
இது மட்டுமில்லாமல் , சேகரிக்கப்படும் மழைநீரை குடிநீராக அல்லாமல் , கழிப்பறைகள் , சலவை மற்றும் துணி துவைத்தல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
 
மேலும் , வறட்சியைத் தடுத்து நீர்வள ஆதாரங்களை ஆதரிக்கிறது , நீர் சுத்திகரிப்புச் செலவைக் குறைக்கிறது , நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறையை அளிக்கிறது. 
 
மழை நீர் சேகரிப்பு கட்டாயம்

தமிழகத்தில் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகளை அமைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதன்படி புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் புதிய கட்டடங்களில் இது போன்ற வசதிகள் இருந்தால் மட்டுமே பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என்ற விதி உள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் , ஒப்பந்ததாரர்கள் இது விஷயத்தில் கவனமாக செயல்படுகின்றனர்.

ஆனால் , புதிய கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தனி வீடுகள் நிலையிலும் , இதில் உரிமையாளர்கள் அலட்சியத்துடன் செயல்படுவது மழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படும் போது தான் தெரிய வருகிறது.

குறிப்பாக புதிய வீடு வாங்கியவர்கள் அதை பயன்படுத்தும் நிலையில் , வடிகால் வசதிகளில் அடைப்பு போன்ற பிரச்னைகள் வராத நிலையில் அதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அதிக மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறாமல் கட்டடத்தில் சேர்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக கட்டடங்களில் மேல் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மொட்டை மாடிக்கான கட்டுமான பணியின் போதே, தண்ணீர் வெளியேறுவதற்கான வாட்டம் முறையாக இருக்க வேண்டும்.

இத்துடன் மொட்டை மாடியில் சேரும் தண்ணீர் எவ்வித தடையும் இன்றி உடனுக்குடன் வெளியேற வழிசெய்ய வேண்டும். இதற்கான குழாய்கள் இணையும் இடங்களில் உடைப்பு உள்ளிப்ப பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். மொட்டை மாடியில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீர், நிலத்தில் இறங்க முறையான மழை நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நீர் உறிஞ்சு குழாய்கள் சாதாரணமாக, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

இதே போன்று நீர் உறிஞ்சு குழிகளில் இருந்து தண்ணீர் நிலத்தில் இறங்கும் வசதி அல்லது கிணற்றில் இறங்கும் வசதி ஆகியவற்றிலும் முறையான பராமரிப்பு அவசியம். இத்துடன் உங்கள் வீட்டை சுற்றி மழைக்காலத்தில் அதிக நேரம் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சாலையில் உள்ள மழை நீர் வடிகால்களுக்கு உரிய இணைப்பை ஏற்படுத்தி , வீட்டில் இருந்து உபரி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

தலைப்பு செய்திகள்

இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget