மேலும் அறிய

மெட்ரோ ரயிலில் இனி டோக்கன் இல்லை... வருகிறது புதிய நடைமுறை!

இனி வரும் காலங்களில் மெட்ரோவில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் விமானநிலையங்களில் போர்டிங் பாஸைப்போன்று காகித பயணச்சீட்டை ஒரு பொத்தானை அழுத்தினால் வாங்க முடியும்.  

சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதிலாக இனி கியூ.ஆர் கோடுடன் கூடிய காகிதப்பயணச்சீட்டு அடுத்த சில மாதங்களில் அறிமுகமாகும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மெட்ரோ நகரங்களில் எல்லாம் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிக்கரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தான் மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னை மாநகரிலும் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிக்கரமாக இயங்கிவருகிறது. இதன் உதவியோடு அரை மணி நேரத்திலேயே நாம் எங்கு செல்லவிருக்கிறோமோ? அங்கு எளிதில் செல்லக்கூடிய வசதிகள் உள்ளது. அதிக பயணக்கட்டணம் என்றாலும் மக்கள் எந்தவித ப்ரசர் இன்றி தங்களது பயணத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மேற்கொள்ளமுடிகிறது. குறிப்பாக மெட்ரோ உதவியோடு விமானநிலையத்திலிருந்து கோயம்பேட்டிற்கு வெறும் 30 நிமிடங்களில் வந்துவிடமுடியும்.

மெட்ரோ ரயிலில் இனி டோக்கன் இல்லை... வருகிறது புதிய நடைமுறை!

 தற்போது இரு வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த ரயில்சேவையை மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்துப்பயணிகளும் பயணிக்கும் வகையில் அனைத்து சேவைகளும் மெட்ரோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதில் மற்ற ரயில்களைப்போன்று டிக்கெட்டுகள் மூலம் பயணிக்க முடியாது. அதற்கு மாற்றாக மெட்ரோ ரயிலில் எந்த நிலையத்தில் இருந்து ஏறுகிறோமோ, அங்கு டோக்கன் பெற்று அதை சென்சார் பொருந்திய நுழைவு வாயிலில் காண்பித்துச் செல்ல வேண்டும். அதேப்போன்று தான்,  ரயிலில்  இருந்து இறங்கும் போதும் சென்சாரில் அந்த டோக்கனைப்போட்டால் தான் நுழைவு வாயில் திறக்கும். அதன் பின்னர் பயணிகள் வெளியேற முடியும்.

இதுப்போன்ற நடைமுறைகளைத் தான் மெட்ரோ நிர்வாகம் இதுவரை அமல்படுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனா  கட்டுப்பாடு காரணமாக டோக்கன்களை ஒவ்வொரு முறையும் கிருமிநாசினிக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி இருப்பதால் மெட்ரோ ரயிலில் தொடுதல் இல்லாத பயணத்துக்கான வழிமுறையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக அச்சிடப்பட்ட கியூ ஆர் குயியீடு பயணச்சீட்டுகளின் பயன்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் மெட்ரோவில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் விமானநிலையங்களில் போர்டிங் பாஸைப்போன்று காகித பயணச்சீட்டை ஒரு பொத்தானை அழுத்தினால் வாங்க முடியும்.  

  • மெட்ரோ ரயிலில் இனி டோக்கன் இல்லை... வருகிறது புதிய நடைமுறை!

இதன் மூலம் இனி எந்த கொரோனா அச்சமின்றி பயணிகள் எளிதாகப் பயணிக்க முடியும். இந்த டிக்கெட்டுகளை பயணிகள் கவுண்டர்களிலும், இயந்திரங்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இதற்காக 40 மெட்ரோ நிலையங்களில் இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறை இன்னும் சில மாதங்களில் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget