மேலும் அறிய

ஆபத்தை உணராமல் இப்படி செய்யலாமா? ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தை கடந்த மக்கள்

ஆவடியில் ரயில் நிலையத்தில் நடைமேடை தாண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  எக்ஸ்பிரஸ் ரயில் அடியில் புகுந்து தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் ரயில் நிலையத்தில் நடைமேடை தாண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  எக்ஸ்பிரஸ் ரயில் அடியில் புகுந்து தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையமாக திகழ்கிறது ஆவடி. இங்கு மத்திய  பாதுகாப்பு படைக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.ஆவடி ஆணையரங்கம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் உள்ளன.இதைத் தவிர ஆவடியைச் சுற்றி ஏராளமான பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் உள்ளன.இவர்களில் பெரும்பாலானோர் ரயில் மூலம் ஆவடிக்கு வருகின்றனர். ஆகையால் பல ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்லும் முக்கிய இடமாக ஆவடி ரயில் நிலையம் திகழ்கிறது.ஆவடி ரயில் நிலையம் சென்னை-திருப்பதி நெடுஞ் சாலைக்கும், புதிய ராணுவ சாலைக்கும் இடையில் அமைந்துள்ளது.இந்த ரயில் நிலையத்தில் குறுக்கே கடந்து செல்வதற்காக ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. நாளடைவில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஒருபுறம் சுவர் எழுப்பி ரயில்வே கேட் மூடப்பட்டது. இருந்த போதிலும் நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கின்றனர்.

ஆபத்தை அறியாமல் சாகசம்

இந்த நிலையில் இன்று ஆபத்தை உணராமல் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு அடியில் பொதுமக்கள் புகுந்து செல்கின்றனர். குறிப்பாக கை குழந்தையோடு வந்த பெண் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயில் கீழ் புகுந்து மற்றொரு புறம் சென்றார். அதேபோல பள்ளி,கல்லூரி மாணவர்கள், காவலர்கள்,பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ரயிலுக்கு அடியில் உயிரை பணயம் வைத்து இந்தச் செயலை செய்கின்றனர்.

அதில் முதியவர்கள் ரயில் அடியில் குனிந்து செல்லும் போது தலையில் அடிபடுகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ரயிலின் அடியில்  புகுந்து செல்கின்றனர்.அந்த சமயத்தில்  இன்னொரு வழிதடத்தில் மின்சார ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்படியான நிலையிலும், இந்தப் பக்கம் இருப்பவர்கள் ரயிலுக்கு கீழே சென்று தண்டாவாளத்தை கடப்பதை காண முடிந்த்து. அதோடு, ரயிலுக்கு அடியில் புகுந்து வருவதே ஆபத்தானது. அப்படியான நிலையிலும், ஒருவர் ஃபோன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்து மறுபுறம் வந்து பேசுகிறார். 

மக்களின் பாதுகாப்பிற்காகவும் விபத்துக்களை தவிர்க்கவும் நடை மேம்பாலத்தை பயன்படுத்துங்கள் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனாலும் மக்கள் இதில் உள்ள ஆபத்தை உணராமல் செயல்படுவது வருத்தத்திற்குரியது.  ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள (HIGH CAPACITY PARCEL VAN) சரக்கு ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து மழையில் நனையாமல் இருக்க பேக்கிங் செய்யப்பட்ட  பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லி பண்ட் நகருக்கு செல்லும்.  பணி இல்லாததாலும், எக்ஸ்பிரஸ் ரயிலை ராயபுரம் ரயில் நிறுத்தத்தில் நிறுத்த இடம் இல்லாததாலும் ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget