மேலும் அறிய

'ஓ இவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறதா..?'; பாலாற்றில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர்..!

பாலாற்றில் இருக்கும் மூன்று தடுப்பணைகளும் மழை காரணமாக நிரம்பி வழிகிறது

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து தமிழ்நாட்டில், அதிக அளவு கனமழையானது பெய்து வருகிறது. வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு, முக்கிய ஆறாக விளங்கி வரும் பாலாற்றில், கனமழை எதிரொலியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாலாற்றில் இருக்கும், தரை பாலங்கள் சில  மூழ்கியுள்ளது. 

ஓ இவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறதா..?'; பாலாற்றில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர்..!
 
வெள்ளப்பெருக்கு
 
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்த நிலையில், ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம் வழியாக குடியாத்தம் செல்லும் தரைப்பாலத்தில், பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூழ்கடித்துள்ளது.

ஓ இவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறதா..?'; பாலாற்றில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர்..!
 
மூன்று தடுப்பணைகள் நிரம்பியது
 
 
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலாற்றிலும், தண்ணீர்  சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  பாலாற்றில் கட்டப்பட்ட,  வயலூர், பழைய சீவரம்  மற்றும் ஈசூர் - வள்ளிபுரம் ஆகிய மூன்று தடுப்பணைகளும் முழுமையாக நிரம்பி வழிந்து உள்ளது. இந்த மூன்று தடுப்பணைகளையும் நிரம்பி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

ஓ இவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறதா..?'; பாலாற்றில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர்..!
 
செய்யாற்றிலும் வெளியேறும் நீர்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ள செய்யாற்றில் தொடர்ந்து வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் செய்யாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் என்ற பகுதியில் பாலாற்றில் கலக்கிறது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அதிக நீர் வரத்து காரணமாக பாலாற்றிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

ஓ இவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறதா..?'; பாலாற்றில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர்..!
 
வாயலூர் தடுப்பணை
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வாயலூர் தடுப்பணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருகிறது. பாலாற்றில் இருக்கும் கடைசி தடுப்பணை வாயலூர் தடுப்பணை மட்டுமே,  இதிலிருந்து வெளியேறும் நீர் நேரடியாக கடலில் கலக்கும். சுமார் நேற்று மாலை வரை வயலூர் தடுப்பணையிலிருந்து, சுமார் 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறியது. இன்றைய நிலவரப்படி வாயலூரில் வினாடிக்கு 30,320 கன அடி நீர் பாலாற்றில், இருந்து கடலில் கலக்கிறது‌. ஒரு நாளைக்கு 2.6 டி.எம்.சி., தண்ணீர்  கடலில் கலக்கிறது‌ இந்த குறிப்பிடத்தக்கது.

ஓ இவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறதா..?'; பாலாற்றில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர்..!
 
விவசாயிகள் கோரிக்கை
 
பாலாற்றில் புதியதாக மூன்று தடுப்பணை கட்டியதால், பாலாற்றில் கடந்த ஒரு ஆண்டாக தண்ணீர் இருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் கடலில் கலக்காமல் இருக்க கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
போக்குவரத்து முடக்கம்.
 
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில் இருந்து இரும்புலி சேரி செல்லும் பாலாற்று மேம்பாலம் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளத்தில் ஒரு கிலோமீட்டர் பாலம் பாலாற்றில், அடித்து செல்லப்பட்டது.  இதனால் இரும்புலிசேரி,  சின்ன எடையாத்தூர்,  அட்ட வட்டம்,  சாமியார் மடம், சேவூர் ஆகிய 5 கிராம மக்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  இதனால் பள்ளி மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மருத்துவமனை மற்றும் அவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்களும் செல்ல முடியாமல் 3 கிலோ மீட்டரில் செல்ல வேண்டிய பாதை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகியது.

ஓ இவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறதா..?'; பாலாற்றில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர்..!
 
அதனால் மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு பாலாற்றின் குறுக்கே சாலை அமைத்து, குழாய்களைக் கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆண்டு தோறும் பெய்து வரும் மழையால் கடந்த 7 ஆண்டுகளாக மழைக்காலங்களில் தற்காலிக பாலம் சிதிலமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக உடைந்த மேம்பாலத்தை அகற்றி புதிய மேம்பாலம் கட்டி தர  முன்வர வேண்டும் என்று பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget