மேலும் அறிய

One City One Card : பஸ், ரயில், மெட்ரோ எல்லாத்துக்கும் ஒரே அட்டை.. ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி

National Common Mobility Card : "சென்னை மாநகர் முழுவதும் இருக்கும், பொதுப்போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த, ஒரே அட்டையை பயன்படுத்தும் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது"

சென்னை மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ஆகியவற்றில் பயணிக்க ஒரே அட்டை பயன்படுத்தும் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகிறது. அந்த வகையில் போக்குவரத்து கழகங்களில், மின்னணு எந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதில் சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை 100% செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மற்ற போக்குவரத்துக் கழகங்களில் இந்த நடைமுறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்க பணிகள் முழு வெற்றி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக, இந்த பணிகளை முடிக்க போக்குவரத்து துறை திட்டம் தீட்டியுள்ளது. 

சென்னை மாநகர் போக்குவரத்து வசதிகள் 

சென்னை மாநகரை பொறுத்தவரை, மாநகர பேருந்துகள், சென்னை மின்சார ரயில் சேவை மற்றும் சென்னை மெட்ரோ ஆகியவை பிரதான போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மூன்று சேவைகளை தினமும் பயன்படுத்தி வருகின்றன. 

மாநகர போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கு தனியாக மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் பாஸ் வழங்கப்படுகிறது. அதே போன்று மெட்ரோ சார்பின் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.‌ சென்னை மின்சார ரயில் சார்பில் சீசன் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரே அட்டை திட்டம்- National Common Mobility Card

இந்தநிலையில் சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ஆகிய மூன்று பொது போக்குவரத்துகளில் ஒரே பயண அட்டை மூலம் பயணிக்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. என்.சி.எம்.சி அட்டை மூலம் மூன்று பொதுப் போக்குவரத்திலும் பயணம் செய்யும் வகையில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

இதற்கு முன்னேற்பாடாக சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும், எஸ்பிஐ வங்கி உதவியுடன் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து, மாநகரப் பேருந்துகளுக்கு மின்னணு எந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் யுபிஐ மூலம் பணம் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

திட்டம் எப்படி செயல்படும் 

இந்த ஒரே பயண அட்டை பயன்பாட்டிற்கு வரும்போது, பயண அட்டையில் தேவையான தொகையை முன்கூட்டியே , ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். பயணிப்பதற்கு ஏற்றவாறு அட்டையில் இருந்து பணம் பிடித்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்பட உள்ளது. அதேபோன்று மாதாந்திர பாஸ் இந்த பயணாட்டில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது. இதேபோன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கவரும் வகையிலும், ஒரு நாள் பாஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நாள் பாஸ் எடுத்துக்கொண்டால், ஒரு நாள் முழுவதும் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகியவற்றை பலமுறை பயணம் செய்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

செயல்பாட்டிற்கு வருவது எப்போது ?

மூன்று முதல் ஐந்து மாதத்திற்குள் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget