மேலும் அறிய

விழுப்புரத்தில் பேருந்துபடிகளில் பயணித்த மாணவர்கள் - திடீர் ஆய்வை மேற்கொண்ட ஆட்சியர்

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்க ஏற்பாடு செய்து ஆட்சியர் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் 5 மாதங்களுக்கு பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்காக 385 அரசு, தனியார் பள்ளிகளும், 69 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் நகரில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு அரசு பேருந்துகள் மூலமாக வந்து செல்கின்றனர். மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு செல்ல அரசு டவுன் பேருந்துகளுக்காக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர்.

விழுப்புரத்தில் பேருந்துபடிகளில் பயணித்த மாணவர்கள் - திடீர் ஆய்வை மேற்கொண்ட ஆட்சியர்

இவர்களின் வசதிக்காக கிராமப்புறங்களுக்கு கூடுதலாக பேருந்து வசதி இல்லாததால் ஒரு சில பேருந்துகள் மட்டும் வருவதால் அந்த பேருந்துகளில் மாணவ- மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றியே பயணம் செய்ய வேண்டும், நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதியை பின்பற்றியே பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை வேளையில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு டவுன் பேருந்துகளில் பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் ஏறி பயணம் செய்வதால் சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு மாணவ- மாணவிகள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வதால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் பேருந்துபடிகளில் பயணித்த மாணவர்கள் - திடீர் ஆய்வை மேற்கொண்ட ஆட்சியர்

அதுமட்டுமின்றி போதிய பேருந்து வசதி இல்லாததால் இயக்கப்படுகின்ற சில பேருந்துகளிலும் இருக்கை கிடைக்காத மாணவர்கள் உயிரை பணயம் வைத்துக்கொண்டு படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதையும் காண முடிகிறது. கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதே தவறென சொல்லப்படும் நிலையில் மாணவர்கள் இப்படி கூட்டம், கூட்டமாக, அதுவும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பெற்றோரையும், பொதுமக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த சூழலை சமாளிக்க பள்ளி மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் டி.மோகன், விழுப்புரம் பேருந்து  நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


விழுப்புரத்தில் பேருந்துபடிகளில் பயணித்த மாணவர்கள் - திடீர் ஆய்வை மேற்கொண்ட ஆட்சியர்

அப்போது அவர், மாணவர்கள் மத்தியில் பேசும்போது, பேருந்துகளில் மாணவர்கள் கூட்டநெரிசலில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. கொரோனா தாக்கம் குறையாத சூழலில் பேருந்துகளில் சமூக இடைவெளியை பின்பற்றியே பயணம் செய்ய வேண்டும். பள்ளிக்கு வந்து மீண்டும் மாலையில் வீடு திரும்பும் வரை முகக்கவசத்தை கழற்றக்கூடாது. கட்டாயம் சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக மாணவர்கள் மாலை வேளையில் பள்ளி முடிந்து வீடு செல்லும்போது பேருந்துகள் இல்லை என்று நினைத்து கூட்டநெரிசலில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யக்கூடாது, பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். அதற்காக மாணவர்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவுரை கூறினார்.


விழுப்புரத்தில் பேருந்துபடிகளில் பயணித்த மாணவர்கள் - திடீர் ஆய்வை மேற்கொண்ட ஆட்சியர்

இதனை தொடர்ந்து மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மட்டும் என்று பலகை வைக்கப்பட்டு இயக்கப்பட்டன. அதில் இருக்கைகளில் மட்டும் மாணவர்கள் முக கவசம் அணிந்தபடி பயணம் செய்யவும், நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த நடைமுறைகளை அனைத்து பேருந்துகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.