மேலும் அறிய

Most Hold Seizure Airport: 2021-ஆம் ஆண்டு அதிகளவு கடத்தல் தங்கத்தை பிடித்த விமான நிலையம்...! முதலிடத்தை பிடித்த சென்னை...!

2021-ஆம் ஆண்டு நாட்டிலேயே அதிகளவு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்ததில் சென்னை விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்ட பொருட்கள், சட்டவிரோதமாக தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஆகியவற்றை விமான நிலையங்கள் வழியாக பலரும் இந்தியாவிற்கு கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Most Hold Seizure Airport: 2021-ஆம் ஆண்டு அதிகளவு கடத்தல் தங்கத்தை பிடித்த விமான நிலையம்...! முதலிடத்தை பிடித்த சென்னை...!

கொரோனா பறிமுதல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போதியளவு விமானங்கள் இயக்கப்படாத காரணத்தால், விமான நிலையங்கள் வழியான கடத்தல் சம்பவங்கள் குறைவாகவே நடந்துள்ளது. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் நாட்டில் அதிகளவில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை :


Most Hold Seizure Airport: 2021-ஆம் ஆண்டு அதிகளவு கடத்தல் தங்கத்தை பிடித்த விமான நிலையம்...! முதலிடத்தை பிடித்த சென்னை...!

2021-ஆம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ 109 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு குறைவாகவே உள்ளது. கடந்தாண்டில் 151 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 392 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018-ஆம் ஆண்டு 328 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு 184 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோழிக்கோடு :


Most Hold Seizure Airport: 2021-ஆம் ஆண்டு அதிகளவு கடத்தல் தங்கத்தை பிடித்த விமான நிலையம்...! முதலிடத்தை பிடித்த சென்னை...!

2021ம் ஆண்டில் அதிக கடத்தல் தங்கம் பிடிபட்டதில் இரண்டாவது இடத்தில் கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் அங்கு 128 கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு 147 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு 262 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு 219 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு 133 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லி :


Most Hold Seizure Airport: 2021-ஆம் ஆண்டு அதிகளவு கடத்தல் தங்கத்தை பிடித்த விமான நிலையம்...! முதலிடத்தை பிடித்த சென்னை...!

நாட்டின் தலைநகரான டெல்லியில் நடப்பாண்டில் 78 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மட்டும் 88 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு நாட்டிலே அதிகபட்சமாக 494 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2018ம் ஆண்டு 453 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு 385 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  

மும்பை :


Most Hold Seizure Airport: 2021-ஆம் ஆண்டு அதிகளவு கடத்தல் தங்கத்தை பிடித்த விமான நிலையம்...! முதலிடத்தை பிடித்த சென்னை...!

நாட்டின் முக்கிய வர்த்தக நகரான மும்பையில் நடப்பாண்டில் 31 கிலோ தங்கம் மட்டுமே கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு 87 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு 403 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. 2018ம் ஆண்டு 763 கிலோ தங்கத்தை மும்பை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர். 2017ம் ஆண்டு 462 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி :

திருச்சி விமான நிலையத்தில் 2021ம் ஆண்டில் மட்டும் 78 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு 76 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு 129 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு 62 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு 62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொச்சின் :

2021ம் ஆண்டு கொச்சின் விமான நிலையத்தை 62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 79 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். 2019ம் ஆண்டு 132 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு 197 கிலோ தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. 2017ம் ஆண்டு 94 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய நிதியமைச்சகத்தால் ராஜ்ய சபாவில் அளிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Embed widget