மேலும் அறிய

சென்னை மாநகராட்சிக்கு சிக்கல் ! ஆக்கிரமிப்பு தகவலில் குளறுபடி , தகவல் ஆணையம் கடும் கண்டனம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து மனுதாரர் கோரிய தகவல்களுக்கு , தவறான தகவல்களை அளித்த சென்னை மாநகராட்சியை , தகவல் மாநில ஆணையம் கண்டித்துள்ளது

ஆக்கிரமிப்பு தகவலில் தவறான தகவல் கொடுத்ததால் , தகவல் ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் புகழ் பாலன். இவரது பாட்டி அமிர்தம்மாள் வீட்டை போலி ஆவணங்கள் வாயிலாக, வாடகைதாரர் அபகரித்து கொண்டதோடு, சொத்து வரியிலும் பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2023ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் , சென்னை மாநகராட்சியிடம் , புகழ்பாலன் விளக்கம் கேட்டிருந்தார். மனு மீதான தினசரி முன்னேற்ற அறிக்கை மற்றும் ஆவண நகல்கள் உள்ளிட்ட 12 தகவல்களை கோரியிருந்தார். தகவல் கிடைக்காததால் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு மீதான விசாரணையில் , மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவில் ; 

ஆணையத்தின் முன் உள்ள ஆவணங்களை பரிசீலித்ததில் , மனுதாரரின் மனுவிற்கும் , முதல் மேல்முறையீட்டு மனுவிற்கும், சென்னை மாநகராட்சி எந்த தகவலையும் அளிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே அப்போதைய ஐந்தாவது மண்டலம் பொதுத் தகவல் அலுவலரும் , தற்போதைய கோடம்பாக்கம் மண்டல வருவாய் பிரிவு அதிகாரியுமான பிரகாஷ் ,  அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும் , தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளருமான தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்.

இருவரிடமும் தற்போதைய பொதுத் தகவல் அலுவலர் விளக்கம் கேட்டு , வரும் 6 - ம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் , மனுதாரருக்கு இனவாரியான பதில்களை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார். மனுதாரரோ தனக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை. ஆவணங்களின் நகல்கள் அளிக்கப்படவில்லை என்றார்.

எனவே ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் , மனுதாரரின் மனுவை சரியாக படித்துப் பார்த்து , சரியான திருத்திய ஆவணங்களின் அடிப்படையில் , இன வாரியான தகவல்கள் மற்றும் நகல்களை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தகவல்களை மனுதாரர் பெற்றதற்கான தபால் சான்றின் நகலை , ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget