மேலும் அறிய

சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்... விரைவில் ரூ.7.11 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி...!

”மாநில அரசு பெண்களுக்கு பலதரப்பட்ட திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன” - ஐ.பெரியசாமி

சுய உதவிக் குழு கடன் திட்டத்தின் கீழ் 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.11 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளைக்கு சொந்த அலுவலகக் கட்டடத்தை இன்று (அக்.17) கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்நிகழ்வில் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் தமிழ்நாடு முதலைமைச்சர் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளைக்கு ரூ.108 லட்சம் செலவில் 3,928 சதுர அடி பரப்பளவில் ஏடிஎம் வசதியுடன் கூடிய சொந்த அலுவலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

 

அவரது அறிவிப்பினைத் தொடர்ந்து தற்போது சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளையின் புதிய அலுவலகக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி 10.07.1930 அன்று பதிவு செய்யப்பட்டு கடந்த 92 ஆண்டுகளாக சென்னை மாநரில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர வகை கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் வங்கியின் இணை உறுப்பினர்களான பொது மக்களுக்குத் தேவையான அனைத்து வகை கடன்களையும், இவ்வங்கி வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்ட கடனுதவிகள் மற்றும் பண்ணை சாரா கடன்கள் அனைத்தும் குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மேம்பாட்டுக்காக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, அரசு நிபந்தனைகளுக்கு உள்பட்டு 5,758 பயனாளிகளுக்கு ரூ.29.09 கோடி அளவுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு கடன் திட்டத்தின் கீழ் 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.11 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

 

மாநில அரசு பல்வேறு திட்டங்களை ஆக்கப்பூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பலதரப்பட்ட திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறது. அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன் போன்றவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நகைக்கடன் பெற்றுள்ள உறுப்பினர்களின் ரசீதுகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் மகேஷ் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் அமலாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget