மேலும் அறிய
காஞ்சிபுரம் : பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று பட்டு பூங்கா செயல்பாட்டுக்கு வரும்.. அமைச்சர் தகவல்..!
காஞ்சிபுரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுப் பூங்கா பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு, முதற்கட்டமாக அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் . காந்தி பேட்டி.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் . காந்தி
மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு பட்டு பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டில், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் அரசு நிலத்தில் 'பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதற்கு திட்ட மதிப்பீடான, 83.83 கோடி ரூபாயில், 9 சதவீத தொகையான, 7.54 கோடி ரூபாயை மானியமாக, தமிழக அரசு வழங்குவதாகவும், 14 கோடி ரூபாய் மதிப்புடைய, 75 ஏக்கர் அரசு நிலத்தை வழங்குவதாகவும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும் 'பட்டு சேலைகள் உற்பத்தி செய்வதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பட்டு நெசவாளர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த பட்டு பூங்கா அமையவுள்ளது என்பதால், காஞ்சிபுரம் நெசவாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், அறிவிப்பு வெளியாகி, 9 ஆண்டுகள் மேலாகியும் இதுவரை பணிகள் துரிதமாக நடைபெறாததால் பட்டு பூங்கா பணிகள் முடங்கியதாக நெசவாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்கா தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி பேசுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். காஞ்சிபுரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா பட்டுப் பூங்கா ஆய்வு மேற்கொண்டேன் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

முதல்கட்ட பணிகளை வேகமாக முடிக்கப்பட்டு வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று செயல்பாட்டு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் பேசுகையில் பட்டு பூங்காவில் அமைக்கப்படவிருக்கும் சாயப்பட்டறை கழிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு சுத்தமான நீர் மட்டுமே வெளியேற்றப்படும் என தெரிவித்தார்
இந்த ஆய்வின் பொழுது உடன் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் முதன்மை செயலாளர் அபூர்வா, ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இருந்தனர் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் முதன்மை செயலாளர் அபூர்வா, ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement