மேலும் அறிய

மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...

Mahabalipuram : மாமல்லபுரம் கடற்கரையில் கடல் உள்வாங்கியதால், கடலிலிருந்து வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயிலை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கடல் உள்வாங்கியதால் மணல் பரப்பில் காட்சி அளிக்கும் மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில், கற்கள் கொட்டி கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க தொல்பொருள்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

 

 

அதிசயம் நிறைந்த மாமல்லபுரம்

சென்னை அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைந்துள்ளது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் (700-728) கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவயே. ஒற்றைக்கல் யானை, அர்ஜுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.

 


மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...

கடலில் தெரியும் கட்டிடங்கள் 

மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 


மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...

 

மீதமுள்ள ஆறு கோவில்கள் மற்றும் கட்டுமானங்களை , கடலுக்குள்ளே பலமுறை பார்த்ததாக மீனவர்களும் சிலர் தெரிவித்து வருகின்றனர். கடல் அரிப்பு மற்றும் கடல் உள்வாங்கும் போது சில கட்டிட அமைப்புகள் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் வெளியே தெரியும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன.

 

 

 

பாதுகாக்கப்பட்ட கடற்கரை கோயில்

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் கடல் நீர் கோயில் வரை உட்புகுந்து அரிக்க துவங்கியதால், இக்கோயிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள்துறை இக்கோயிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை கடந்த 1984-ம் ஆண்டில் கடற்கரையில் பாறை கற்கள் குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து கடல் நீர் உட்புகாமல் இருக்க பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் கடற்கரை கோயிலின் வடக்கு புறம் பகுதியில் பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை புராதன சின்னம் துர்கா சிற்பத்துடன் உள்ளது.

 

 

கடலில் மூழ்கிய குடவரை கோயில் 

இங்கு தங்கள் பாரம்பரிய மாசிமக திருவிழா நடைபெறும் நாள் அன்று கடற்கரையில் , குவியும் பழங்குடி இருளர் மக்கள் கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரையில் முழங்கால் கடல் நீரில் நீந்தி சென்று அதில் உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். குறிப்பாக மாசிமாதத்தில் இந்த குடை வரை 2 முதல் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடற்கரை கோயிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடை வரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர்.  

 


மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...

 

 

திடீரென தென்படும் கோயில்

 

அவ்வப்போது கடல் அரிப்பின்போது இந்த குடைவரை சிற்பத்தை சில குறிப்பிட்ட மாதத்திற்கு கடல் சூழ்வதும், பிறகு சில மாதங்களுக்கு கடல் உள்வாங்குவதும், அப்போது மணல் பரப்பில் இந்த குடைவரை கோயில் காட்சி அளிப்பதும் வழக்கமாகும். மேலும் கடலின் உப்புக்காற்றால் அந்த குடைவரை மெல்ல, மெல்ல அரித்து சேதமடைந்து வருகிறது. தற்போது கடலின் தட்ப வெப்ப நிலையை யாராளும் கணிக்க முடியவில்லை எனவும், கடல் எப்போது உள் வாங்குகிறது.எ ப்போது கரைப்பகுதியை நோக்கி முன்னோக்கி வருகிறது என சரியாக கணிக்க முடியவில்லை என இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 


மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...

பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, முற்றுபெறாத துர்கா சிற்பத்துடன் உள்ள புராதன சின்னமான மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலின் முக்கியத்துவம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இது கடலில் மூழ்கி அழிந்துவிடாமல் நமது பாரம்பரிய வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் வகையில், இந்திய தொல்பொருள் துறை நிர்வாகம் கடற்கரை கோயிலை பாதுகாப்பு அரணாக கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவதுபோல் மகிஷாசுரமர்த்தினி குடை வரை கோயிலையும், அதனை சுற்றி கற்கள் கொட்டியும், கம்பி வேலி அமைத்தும் அடுத்த தலைமறையினர் இதனை கண்டுகளிக்கும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொல்பொருள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   

   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Embed widget