மேலும் அறிய
இறந்தும் உயிர் வாழும் இளைஞர்..7 பேருக்கு உடல் உறுப்பு தானம்..! திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் , மூளைச் சாவு அடைந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது
![இறந்தும் உயிர் வாழும் இளைஞர்..7 பேருக்கு உடல் உறுப்பு தானம்..! திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம் Mahabalipuram area of Chengalpattu district young man died of natural causes and his organs were donated to 7 people TNN இறந்தும் உயிர் வாழும் இளைஞர்..7 பேருக்கு உடல் உறுப்பு தானம்..! திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/51521c16f5b4e7e82f4bb8d215670c531692779420140113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உடல் உறுப்புகளை தானம் செய்த மணிகண்டன்
செங்கல்பட்டு (Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி அஞ்சாலை. இவர்களுக்கு உதயகுமார், கனகலட்சுமி, மணிகண்டன் ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களில் உதயகுமார் மற்றும் கனகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 3 ஆவது மகனான மணிகண்டனுக்கு திருப்போரூர் அடுத்த நெம்மேலி பேரூர் கிராமத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் (28) அக்ரி டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு கரும்பாக்கம் கிராமத்தில் உரங்கள், வேளாண் பூச்சி மருந்துகள், விதைகள் விற்பனை செய்யும் கடையை சொந்தமாக நடத்தி வந்தார்.
![விபத்து நடைபெற்ற இடம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/c2c96f64324b33a14b7288dd837cae801692779441464113_original.jpg)
மோட்டார் சைக்கிளும் நேருக்கு - நேர் மோதி
தினமும் மோட்டார் சைக்கிளில் வட கடம்பாடியில் இருந்து கரும்பாக்கத்திற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 20ஆம் தேதி மதியம் கடையில் இருந்து நெம்மேலி பேரூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்து, மதிய உணவு சாப்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் திருப்போரூர் வழியாக கரும்பாக்கம் கடைக்கு சென்று கொண்டிருந்தார். மடையத்தூர் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர், அடுத்த வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மணிகண்டனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மணிகண்டன் மூளைச்சாவு
தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கம் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் தந்தை ஏகாம்பரம், தாய் அஞ்சாலை, மனைவி ஹேமலதா, சகோதரர் உதயகுமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
![உடல் உறுப்புகளை தானம் செய்த மணிகண்டன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/1496d06df522194caff55a565fca9c5f1692779482564113_original.jpg)
உடல் உறுப்புகள் 7 பேருக்கு
இதையடுத்து மருத்துவக்குழுவினர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவித்து உடல் உறுப்புகள் தேவை குறித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு இதய வால்வுகள், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள், ஒரு கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்தம் செய்ய முடிவு செய்து, அதற்கான அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். திருமணமாகி 7 மாதத்தில் விபத்தில் மரணமடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக, திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion