மேலும் அறிய

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சி.வி.சண்முகம் அளித்த புகாரில் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரில் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கடந்த மாதம் சென்னையை அடுத்த வானகிரத்தில் நடந்த அதே வேளையில் பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கு மோதல் எழுந்ததாகவும்,  மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பன்னீர்செல்வம் மற்றும் அவரது குண்டர் படையினர் எடுத்து சென்று விட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவும் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம்  தாக்கல் செய்த மனுவில், அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரம் குறித்து ராயப்பேட்டை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அதில் அதிமுக அலுவலக சுவாதீனம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்ததாகவும், அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறு எந்த பிரச்சனையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார். 
 
அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குண்டர் படையினர் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம் புகார் அளித்ததாகவும் அந்த புகாரை பெற்றுக்கொண்டு ரசீது வணங்கவில்லை எனவும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகு ரசீது கிடைக்கப்பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில் எதிர்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, சீலை அகற்றி சாவியை இடைக்கால பொதுச்செயலாளரிடம் அளிக்க உத்தரவிட்டது. இதன் பின்னர் அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குண்டர் படையினர் எடுத்து சென்று விட்டதாகவும் இது தொடர்பாக கடந்த மாதம் 23ஆம் தேதி புகார் அளித்ததாகவும் ஆனால் இந்த புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் இந்த புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரில் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget