மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் பரிதாபமாக பறிபோன தாய், சேய் உயிர் - பிரசவத்தின் பொழுது அலட்சியமா ?

" நீதி வழங்க வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்"

காஞ்சிபுரத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
காஞ்சிபுரம் (Kanchipuram): காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெரு பகுதியைச் சேர்ந்த உதயராஜ் (25). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி (21) பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில் உதயகுமார் ராஜேஸ்வரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ராஜேஸ்வரி கருவுற்றிருந்த நிலையில், சின்ன காஞ்சிபுரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதனை தொடர்ந்து நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் பரிதாபமாக பறிபோன தாய், சேய் உயிர் - பிரசவத்தின் பொழுது அலட்சியமா ?
 
அதிக எடை உடன் குழந்தை
 
நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராஜேஸ்வரிக்கு பிரசவம் பார்த்த நிலையில் திடீரென உடல் நலம் குன்றியதால் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற பிரசவத்தில் அதிக எடை உடன் குழந்தை பிறந்து உள்ளது. இதனை அடுத்து குழந்தை சில மணி நேரங்களிலே உயிரிழந்து உள்ளது. மேலும் ராஜேஸ்வரியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரத்தில் பரிதாபமாக பறிபோன தாய், சேய் உயிர் - பிரசவத்தின் பொழுது அலட்சியமா ?
 
உரிய நீதி வழங்க வேண்டும்
 
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் ராஜேஸ்வரியும், குழந்தையும் உயிரிழந்ததாக கூறி சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உரிய நீதி வழங்க வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியட் சீசர் தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
 
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை அலுவலர் பிரியா ராஜிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இது குறித்து புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget