மேலும் அறிய
Advertisement
UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)
காஞ்சிபுரம் : காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பி ஓட்டம் - 2 பேர் பணியிடை நீக்கம்
தங்கள் வீடுகளுக்குச் சென்ற சிறுமிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பெற்றோர்கள், காப்பகத்தில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் பாதுகாவலர் ஆகிய இருவர் பணியிடை நீக்கம்
அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம்
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலையை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர்.
குழந்தைகள் நல குழுமம்
இது மட்டும் இல்லாமல் சிறு வயதில் திருமணம் வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் அரசு காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் குழந்தைகள், சிறுமிகள் என 29 பேர் உள்ளனர்.
சிறுவயது காதல் பிரச்னை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 சிறுமிகள் காதல் பிரச்னையால் மீட்டு குழந்தைகள் நல குழுமத்தினால் சேரக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்று விட்டனர். இந்நிலையில் பாதுகாவலர் இரவு பணியில் இருந்த பாதுகாவலரனின் அறையை தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் தப்பி ஓடினர்.
தப்பி ஓடிய சிறுமிகள்
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓடிய ஆறு சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதே போல் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணியிடை நீக்கும்
இந்நிலையில் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் கரசங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் தங்கள் வீடுகளுக்கு சென்ற நிலையில் அவர்களின் பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுமிகளை ஒப்படைத்தனர். மீதம் உள்ள நான்கு சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
நான்கு சிறுமிகள் மீட்பு.
தப்பி ஓடிய சிறுமிகளில் முடிச்சூர், கரசங்கால், பகுதியினைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் நேற்று மாலையே மீட்கப்பட்ட நிலையில், சென்னை வியாசர்பாடி மற்றும் காஞ்சிபுரம் அடுத்த குண்டு குளம் பகுதிகளை சேர்ந்த ஆகிய இரண்டு சிறுமிகளை போலீசார் தேடி பிடித்து மீட்டனர். இரண்டு சிறுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
இந்தியா
க்ரைம்
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion