மேலும் அறிய

மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் போலீஸ் சித்திரவதைக்கு உள்ளானாரா ? பரபரப்பில் காஞ்சிபுரம்...

" முன்னாள் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை " 

காஞ்சிபுரத்தில் மதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் பிரபு ஆகியோர் மீது போலீஸ் சித்திரவதை செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு 

 

 

ஒய்வு பெற்றபெண் ஆய்வாளர் கொலை 

 

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காலண்டர் தெருவில் வசித்து வந்த, முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் கஸ்தூரி என்பவர் கடந்த இந்த மாதம் 22 தேதியன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இது தொடர்பான வழக்கில், கஸ்தூரி கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். 

 


மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் போலீஸ் சித்திரவதைக்கு உள்ளானாரா ? பரபரப்பில் காஞ்சிபுரம்...

இந்த வழக்கு தொடர்பாக மதிமுக கட்சியின் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் அதிமுக பிரமுக பிரபு ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். வளையாபதி தற்போது வேலூர் மத்திய சிறையில் , நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். பிரபு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ 

 

 

கள ஆய்வு அறிக்கை

 

 

இந்தநிலையில் வளையாபதி மற்றும் பிரபு ஆகியோர் காவல்துறை விசாரணையின் பொழுது சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர். இது தொடர்பாக காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பான கள ஆய்வு அறிக்கை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. 


மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் போலீஸ் சித்திரவதைக்கு உள்ளானாரா ? பரபரப்பில் காஞ்சிபுரம்...

கள ஆய்வு அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் கண்காணிப்பாக்கம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் பேசுகையில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கஸ்தூரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும், சிபிசிஐடி சிறப்பு பிரிவு போலீசுக்கு கஸ்தூரி வழக்கை மாற்ற வேண்டும் ‌. காஞ்சிபுரம் நத்தப்பேட்டை பகுதியில் பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் உள்ள கட்டிடத்தில் வைத்து வளையாபதி போலீசார் சித்தரவதை செய்துள்ளனர். எனவே அந்த இடத்தை மனித உரிமை ஆணையம் சீல் வைக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி உதயகுமார் ஐபிஎஸ் , ஏ.டி.எஸ்.பி சார்லஸ் சாமுவேல் துரைராஜ், டிஎஸ்பி மணிமேகலை மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயவேல் ஆகியோர் இணைந்து வளையாபதி மற்றும் பிரபு ஆகிய இருவரையும் சித்திரவதை செய்துள்ளனர். 

 

 

 

காவல்துறை மீது நடவடிக்கை

 

 

காஞ்சிபுரத்தில் மிக கொடூரமான காவல் சித்திரவதை சம்பவம் நடைபெற்று இருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் இந்த கள ஆய்வு தொடர்பாக சந்தித்து சென்றால், சந்திப்பை மறுக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் நேரடி கவனத்தில் எடுத்துக்கொண்டு, உதயகுமார் ஏ.எஸ்.பி மற்றும் டிஎஸ்பி மணிமேகலை உள்ளிட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட வேண்டும்.  

 


மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் போலீஸ் சித்திரவதைக்கு உள்ளானாரா ? பரபரப்பில் காஞ்சிபுரம்...

 

காவல்துறையிடம் இணைந்து முதலமைச்சரும் கூட்டு சதியில் ஈடுபடுகிறார் என்ற நிலை வந்து விடக்கூடாது. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற சித்திரவதை விட அதிக அளவு சித்தரவதை இவர்களுக்கு நடைபெற்றிருக்கிறது. திமுக அரசில் இது போன்ற கொடூர நடந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார் ‌. கள ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Modi Met Biden: ”இந்த முறையும் மிஸ் ஆகல” பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு - பேசியது என்ன?
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்; திசநாயகே தொடர்ந்து முன்னிலை
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
Embed widget