மேலும் அறிய

" நா. முத்துக்குமார் விளையாடி மகிழ்ந்த காஞ்சிபுரம்": புத்தக கண்காட்சியில் புகழாரம்...!

காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவிற்கான விளம்பரத்தில் காஞ்சியை சேர்ந்த பாடல் ஆசிரியர் நா.முத்துகுமாரை முன்னிலைப்படுத்தியது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் காஞ்சி புத்தகத் திருவிழா 2022 நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் புத்தகத் திருவிழா குறித்த விளம்பர பதாகைகள் மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பும் வகையில் குறும்படம் ஆகியவை வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. சங்க காலம் தொட்டு தமிழை வளர்த்த காஞ்சிபுரத்திலும்,  பல்லவர் சோழ மன்னர்கள் காலங்களில் கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்கும் கைலாசநாதர் கோயில் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரநாதர் கோயில் என திருத்தலங்களும் உலக புகழ் பெற்ற அத்திவரதர் வைபவம் நடைபெற்ற காஞ்சி குறித்த காணொளியும் , அதே நேரத்தில் சினிமா திரைப்படங்களில் புதிய முத்திரை பதித்த காஞ்சி மாநகரின் புகழ் பெற்ற எழுத்தாளர் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த விளையாடிய காஞ்சியில் , உலகப் புகழ் பெற்ற பட்டு நகரம் தொழிற்சாலை நகரம் என பல்புகழ் கொண்ட காஞ்சி மாநகரில் புத்தகத் திருவிழா நடைபெறுவதாகவும் இந்த காணொளியில் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசுகையில் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெறவுள்ள காஞ்சி புத்தகத் திருவிழா 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் , இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் சிந்திக்க தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மனதை மயக்கும் கலை நிகழ்ச்சிகள் குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் என பல வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரியான முறையில் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நடத்திட அனைவரும் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். விளம்பர பதாகைகள் காணொளி காட்சிகள் ஆகியவற்றை வெளியிட சாதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி , மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி , மகளிர் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த குறும்படத்தில் காஞ்சிபுரம் பிரபல திரைப்பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமாரை முன்னிறுத்திய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget