மேலும் அறிய

பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசிய இளம்பெண்; மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - சென்னையில் சோகம்

பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போன் பேசிய இளம்பண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரம் அடுத்த திருநீர்மலை சாலையில் பெண்கள் விடுதி அமைந்துள்ளது.  இந்த விடுதியில் அந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில பெண்கள் தங்கி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற பெண்ணும் இந்த விடுதியில் தங்கி வந்தார்.

நேற்று காலை குமாரி தனது செல்போனில் பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டு நண்பர்களிடம் போன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் விடுதி அருகே உயர்மின் அழுத்த கம்பி செல்கிறது. குமாரி துவைத்து காயப்போட்டிருந்த துணிகள் உயர்மின் அழுத்த கம்பி செல்லும் பகுதி அருகே விழுந்துவிட்டது.


பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசிய இளம்பெண்; மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - சென்னையில் சோகம்

இதனால், துணியை எடுக்க குமாரி முயற்சித்துள்ளார். அதற்காக, அந்த பகுதிக்கு செல்லும் வழியில் இருந்த கிரில் கேட் ஒன்றின் மீது ஏறி துணியை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போதும், குமாரி தன்னுடைய செல்போனை பவர்பேங்கில் சார்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, உயர்அழுத்த மின்சார கம்பியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் கதிர்வீச்சு காரணமாக செல்போனில் பாய்ந்தது. இதனால், குமாரி மீது மின்சாரம் பாய்ந்ததுடன் செல்போனும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் குமாரி சம்பவ இடத்திலே உடல் கருகி துடிதுடித்து வலியில் அலறினார்.


பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசிய இளம்பெண்; மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - சென்னையில் சோகம்

மேலும், குமாரி மீது பாய்ந்த மின்சாரம் அந்தை கட்டிடம் முழுவதும் பாய்ந்தது. அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூனம்(20 வயது) ஊர்மிளா குமாரி (வயது 24) ஆகிய இருவருக்கும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, தகவலறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். மின்சாரம் தாக்கி இவர்கள் மூன்று பேரும் படுகாயமடைந்து வலியில் துடிதுடிப்பதை கண்டவர்கள் காயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கும்கும் குமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வடமாநில பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசும்போது சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது பேராபத்து என்று பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் லட்சக்கணக்கில் தங்கம் பறிமுதல்... வசமாக சிக்கிய 3 பெண்கள்..!

மேலும் படிக்க: Chennai Traffic: சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. புதிய வழிகள் இவைதான்..! 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யின் தனிப்படை EX. IG தலைமையில் குழு பரபரக்கும் பனையூர் | Karur Stampede | TVK Vijay
Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியர் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியர் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
Top 10 News Headlines: கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை, ட்ரம்ப்பை மீறி செயல்படும் ஈரான், WC ODI-மகளிர் அணி சாதனை - 11 மணி செய்திகள்
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை, ட்ரம்ப்பை மீறி செயல்படும் ஈரான், WC ODI-மகளிர் அணி சாதனை - 11 மணி செய்திகள்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
விஜய் பிரச்சாரத்தில் நிகழ்ந்த சோகம்: சிபிஐ அதிரடி விசாரணை! விஜய் விசாரிக்க திட்டம் ?
விஜய் பிரச்சாரத்தில் நிகழ்ந்த சோகம்: சிபிஐ அதிரடி விசாரணை! விஜய் விசாரிக்க திட்டம் ?
Embed widget