மேலும் அறிய

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?

விவசாயிகளுக்கு தொல்லைத் தரும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், யார் காட்டுப்பன்றிகளை சுடலாம் என்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். 

காட்டுப்பன்றிகள்:

அவர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அமைச்சர்கள் நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அப்போதைய அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனையின்படி குழு அமைக்கப்பட்டது. 

தலைமை வனப்பாதுகாப்பாளர், தலைமை வன உயிர்க்காப்பாளர், விவசாயப் பிரதிநிதிகள், வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டத்துறை, அறிவியல் நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் 19 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, நேற்று வனத்துறை சார்பில் இந்த அரசாணை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

காட்டுப்பன்றிகளை சுட அனுமதி:

காட்டுப்பன்றிகள் என்பது ஒன்றிய அரசின் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளது. வன விலங்கு அறிவிப்பு பட்டியலில் காட்டுப்பன்றிகளும் உள்ளது. அதை விலக்குவது சாதாரணமாக முடியாது. அதேசமயத்தில், வன விலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என்று இங்கிருந்த விவசாயிகள் எல்லாம் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மொத்தம் 25 பேர் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளனர். 

அந்த அடிப்படையில்தான் இந்த அரசாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டவிதிப்படி, காப்புக்காட்டில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை. அதேசமயத்தில் 1 கி.மீட்டர் முதல் 3 கி.மீட்டர் வரையிலான பகுதிகளில் காட்டுப்பன்றிகளை பிடித்தால் அதை திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகமாக நியமிக்கப்படுவார்கள். காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் இருந்து 3 கி,மீட்டருக்கு அப்பால் வந்தால் அதை சுடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும். 

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு யாரு சுடலாம்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி வனத்துறை அதிகாரிகள் மட்டுமே சுடலாம். அதற்கான அதிகாரம்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், மலையடிவாரத்தில் விவசாயம் செய்பவர்கள் காட்டுப்பன்றிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்பு, மக்காச்சோளம், தக்காளி போன்ற சாகுபடி காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. 

தலைப்பு செய்திகள்

விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget