மேலும் அறிய

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?

விவசாயிகளுக்கு தொல்லைத் தரும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், யார் காட்டுப்பன்றிகளை சுடலாம் என்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். 

காட்டுப்பன்றிகள்:

அவர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அமைச்சர்கள் நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அப்போதைய அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனையின்படி குழு அமைக்கப்பட்டது. 

தலைமை வனப்பாதுகாப்பாளர், தலைமை வன உயிர்க்காப்பாளர், விவசாயப் பிரதிநிதிகள், வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டத்துறை, அறிவியல் நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் 19 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, நேற்று வனத்துறை சார்பில் இந்த அரசாணை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

காட்டுப்பன்றிகளை சுட அனுமதி:

காட்டுப்பன்றிகள் என்பது ஒன்றிய அரசின் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளது. வன விலங்கு அறிவிப்பு பட்டியலில் காட்டுப்பன்றிகளும் உள்ளது. அதை விலக்குவது சாதாரணமாக முடியாது. அதேசமயத்தில், வன விலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என்று இங்கிருந்த விவசாயிகள் எல்லாம் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மொத்தம் 25 பேர் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளனர். 

அந்த அடிப்படையில்தான் இந்த அரசாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டவிதிப்படி, காப்புக்காட்டில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை. அதேசமயத்தில் 1 கி.மீட்டர் முதல் 3 கி.மீட்டர் வரையிலான பகுதிகளில் காட்டுப்பன்றிகளை பிடித்தால் அதை திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகமாக நியமிக்கப்படுவார்கள். காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் இருந்து 3 கி,மீட்டருக்கு அப்பால் வந்தால் அதை சுடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும். 

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு யாரு சுடலாம்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி வனத்துறை அதிகாரிகள் மட்டுமே சுடலாம். அதற்கான அதிகாரம்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், மலையடிவாரத்தில் விவசாயம் செய்பவர்கள் காட்டுப்பன்றிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்பு, மக்காச்சோளம், தக்காளி போன்ற சாகுபடி காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. 

தலைப்பு செய்திகள்

தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
தமிழக வரலாற்றிலேயே நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில் தெரியுங்களா?
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget