மேலும் அறிய

இதை மட்டும் செய்யாதீர்கள்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொன்ன அட்வைஸ்..!

நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் ஆபத்தான முறையில் இளைஞர்கள் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை
 
வடகிழக்கு பருவமழையொட்டி  பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான,1,500 ஏக்கர் பரப்பளவுகளை கொண்ட, தாமல் ஏரியானது,தொடர் கன மழையின் காரணமாக  முழு கொள்ளளவான 18 அடியும் முழுவதுமாக நிரம்பி ஏரியின் கலங்கள் வழியாக உபரி நீரானது தொடர்ந்து வெளியேறி வருகிறது.

இதை மட்டும் செய்யாதீர்கள்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொன்ன அட்வைஸ்..!
 
 
மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி
 
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தாமல் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியிலுள்ள நீர் இருப்பு, வெளியேற்றம் என்பன குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
 

இதை மட்டும் செய்யாதீர்கள்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொன்ன அட்வைஸ்..!
 
அதன் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி கூறுகையில், வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் தென்னேரி ஏரி, உத்திரமேரூர் பெரிய ஏரி, தாமல் என மூன்று மிகப்பெரிய ஏரிகள் உள்ளன. இதில் மூன்றாவதாக உள்ள தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது கலங்கள் வழியாக வெளியேறி வருகின்றது. பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், பொது மக்கள் குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

இதை மட்டும் செய்யாதீர்கள்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொன்ன அட்வைஸ்..!
 
மேலும் கிராமப்புறங்களிலுள்ள ஏரிகள், அந்தந்த கிராம நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பதற்கு கிராம ,ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், வி.ஏ.ஓ ஆகியோர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது தாமல் ஏரியில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் குளிப்பது,மீன் பிடிப்பது போன்ற செயல்களை  தடுக்கும் பொருட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோல் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் பகுதிகள் குறித்தான தகவல்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியை காவல்துறையினர்  கண்காணித்து வருகின்றனர் என  தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
Trump Vs Putin: “நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
“நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
Operation Sindhu: ரைட், ஆப்ரேஷன் சிந்துவை தொடங்கிய இந்தியா - முதல் பேட்ச்சில் 110 பேர், டெல்லியில் லேண்டிங்
Operation Sindhu: ரைட், ஆப்ரேஷன் சிந்துவை தொடங்கிய இந்தியா - முதல் பேட்ச்சில் 110 பேர், டெல்லியில் லேண்டிங்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
Trump Vs Putin: “நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
“நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
Operation Sindhu: ரைட், ஆப்ரேஷன் சிந்துவை தொடங்கிய இந்தியா - முதல் பேட்ச்சில் 110 பேர், டெல்லியில் லேண்டிங்
Operation Sindhu: ரைட், ஆப்ரேஷன் சிந்துவை தொடங்கிய இந்தியா - முதல் பேட்ச்சில் 110 பேர், டெல்லியில் லேண்டிங்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
Lexus LX 500d: இப்படியும் ஒரு காரா? கோடிகளில் விலை, நிரம்பி வழியும் புக்கிங் - இனி ஆஃப்-ரோட்னா லெக்சஸ் தான்
Lexus LX 500d: இப்படியும் ஒரு காரா? கோடிகளில் விலை, நிரம்பி வழியும் புக்கிங் - இனி ஆஃப்-ரோட்னா லெக்சஸ் தான்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Embed widget