மேலும் அறிய

தலைகீழாய் மாறும் GST சாலை..‌ இருசக்கர வாகன ஓட்டிகளே உங்களுக்குத்தான்..! இன்னும் ஒரே மாதம்தான்

Two Wheeler Priority Signal in GST Road: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில், இருசக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன.

Traffic congestion: சென்னை புறநகர் பகுதிகளில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

சென்னை போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர, பல்வேறு நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தேவையான மாற்று பாதைகள், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்ட பிறகும், ஒரு சில காரணங்களால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ஸ்மார்ட் டிராபிக் சிஸ்டம் (smart traffic system)

எனவே, சென்னையில் " ஸ்மார்ட் டிராபிக் சிஸ்டம் " (smart traffic system) மூலம் போக்குவரத்தினை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக U-Turn அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. 

வெற்றி பெற்ற முயற்சி 

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்ட U-TURN பெருமளவில் கை கொடுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் 10 நிமிடம் வரை பயண நேரம் குறைந்துள்ளது. அப்பகுதியில் தற்போது காமாட்சி மருத்துவமனை சிக்னலில் நடைபாதை சிக்னல் மட்டுமே தற்போது உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல இடங்களில் U-TURN அமைத்து, சிக்னல்களை முழுமையாகவும் அல்லது பகுதியாக மூட போக்குவரத்து போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

புதிய முயற்சியை கையில் எடுத்த போக்குவரத்து போலீசார் 

சென்னை மாநகர் முழுவதும் 65 சிக்னல்கள், 15 நிமிடங்கள் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதை கணக்கெடுத்துள்ளனர். இந்த சிக்னல்களில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க, தொடர் ஆலோசனைகளும் பல்வேறு புதிய நடவடிக்கைகளையும் போக்குவரத்து போலீசார் எடுத்து வருகின்றனர். இதன் மூலம் அண்ணா சாலையில் முதல் கட்டமாக 8 இடங்களில் சிக்னல் நீக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை - Two Wheeler Priority Signal 

இதேபோன்று தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசாரும் பல்வேறு போக்குவரத்து சீர்திருத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து திட்டங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (ஜிஎஸ்டி சாலை) உள்ள முக்கிய சிக்னல்களில் இரு சக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக, 30 வினாடிகள் முன்கூட்டியே சிக்னல் இருசக்கர வாகனங்களுக்கு என பிரித்யேகமாக திறந்து விடப்படும். குறிப்பாக இந்த சிக்னல்களில், பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு வரப்பிரசாதம் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று இந்த திட்டத்தால் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டும் இல்லாமல், கார்களில் செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், இந்த முறை தடுக்கும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில், இருசக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், டிராபிக் சிக்னல் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்குள் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Embed widget