மேலும் அறிய

"எங்கும் இருப்பவர் கடவுள்… அவருக்கு யாரும் இடம் கொடுக்கத் தேவையில்லை", சென்னை உயர்நீதிமன்றம்!

"தீவிரமான வெறி கொண்டவர்கள்தான் மதம் என்னும் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் சம்பவங்களுக்கு வேர் காரணங்களாக உள்ளனர்."

"எங்கும் இருப்பவர் கடவுள், அவருக்கு யாரும் இடம் கொடுக்க தேவையில்லை, அதன் மீது தீவிரமான வெறி கொண்டவர்கள்தான் மதம் என்னும் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் சம்பவங்களுக்கு வேர் காரணங்களாக உள்ளனர்." பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. "வழக்கு தொடுத்தவர், கோவில் கட்டவேண்டும் என்றால், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை தவறாக ஆக்ரமித்து கட்டக்கூடாது, அது சாதி, மத, இன பேதமின்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்கான ஒதுக்கப்பட்ட பொது இடம்." என்று சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

"வழக்கு தொடுத்தவர் விநாயகரை பக்தர்கள் அந்த இடத்தில் தொழுவதற்கான வசதிகளை செய்தே ஆகவேண்டும் என்று தீர்க்கமாக இருந்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்வதற்கான உரிமை அவருக்கு தாராளமாக உண்டு. அப்படியேதாவது நிலம் இருந்தால், அங்கு கோயில் கட்டி இடத்தை மாற்றிக்கொள்ளலாமே" என்று நீதிபதிகள் கூறினர். 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் விநாயகர் கோயிலை அகற்றுவதாக வந்த நோட்டிசிற்கு எதிராக எஸ். பெரியசாமி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அவரே அந்த கோயிலின் அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீதிமன்றத்தில் இந்த கோயில் அந்த இடத்தில் 30 வருடங்களாக இருக்கிறது என்றும் அது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் செய்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

அதனை மறுத்து கூறிய நீதிமன்றம், "அந்த இடத்தில் கோயில் 30 வருடங்களுக்கு மேலாக இருப்பதாகவே இருக்கட்டும், அந்த நிலமும் கோயிலுக்கு சொந்தமானதாகவே இருக்கட்டும், ஆனால் அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து வழக்கை நிரூபிப்பதில் என்ன தடை உங்களுக்கு?" என்று கேள்வி எழுப்பியது. அவற்றை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியும் அவரால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.

வழக்கு தொடுத்தவர் கூறுவது போன்று அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்றும், அதனால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பக்தர்கள் வழிபடுகிறார்கள் என்னும் காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, கவலையளிக்கும் விதமாக அவரால் அந்த கோயில் அறங்காவலுக்கு சொந்தமானதுதான் என்று நிரூபிக்கக் கூடிய ஆவணங்களை நீதிமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்காக இவரது வழக்கை ஏற்றுக்கொண்டு கோயில் இயங்க அனுமதி அளித்தால், எல்லோரும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்று காரணம் கூறி ஆக்கிரமிப்புகள் நடத்தும் வாய்ப்புகள் நிறைய உள்ளன" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget