மேலும் அறிய

"எங்கும் இருப்பவர் கடவுள்… அவருக்கு யாரும் இடம் கொடுக்கத் தேவையில்லை", சென்னை உயர்நீதிமன்றம்!

"தீவிரமான வெறி கொண்டவர்கள்தான் மதம் என்னும் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் சம்பவங்களுக்கு வேர் காரணங்களாக உள்ளனர்."

"எங்கும் இருப்பவர் கடவுள், அவருக்கு யாரும் இடம் கொடுக்க தேவையில்லை, அதன் மீது தீவிரமான வெறி கொண்டவர்கள்தான் மதம் என்னும் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் சம்பவங்களுக்கு வேர் காரணங்களாக உள்ளனர்." பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. "வழக்கு தொடுத்தவர், கோவில் கட்டவேண்டும் என்றால், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை தவறாக ஆக்ரமித்து கட்டக்கூடாது, அது சாதி, மத, இன பேதமின்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்கான ஒதுக்கப்பட்ட பொது இடம்." என்று சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

"வழக்கு தொடுத்தவர் விநாயகரை பக்தர்கள் அந்த இடத்தில் தொழுவதற்கான வசதிகளை செய்தே ஆகவேண்டும் என்று தீர்க்கமாக இருந்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்வதற்கான உரிமை அவருக்கு தாராளமாக உண்டு. அப்படியேதாவது நிலம் இருந்தால், அங்கு கோயில் கட்டி இடத்தை மாற்றிக்கொள்ளலாமே" என்று நீதிபதிகள் கூறினர். 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் விநாயகர் கோயிலை அகற்றுவதாக வந்த நோட்டிசிற்கு எதிராக எஸ். பெரியசாமி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அவரே அந்த கோயிலின் அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீதிமன்றத்தில் இந்த கோயில் அந்த இடத்தில் 30 வருடங்களாக இருக்கிறது என்றும் அது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் செய்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

அதனை மறுத்து கூறிய நீதிமன்றம், "அந்த இடத்தில் கோயில் 30 வருடங்களுக்கு மேலாக இருப்பதாகவே இருக்கட்டும், அந்த நிலமும் கோயிலுக்கு சொந்தமானதாகவே இருக்கட்டும், ஆனால் அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து வழக்கை நிரூபிப்பதில் என்ன தடை உங்களுக்கு?" என்று கேள்வி எழுப்பியது. அவற்றை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியும் அவரால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.

வழக்கு தொடுத்தவர் கூறுவது போன்று அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்றும், அதனால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பக்தர்கள் வழிபடுகிறார்கள் என்னும் காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, கவலையளிக்கும் விதமாக அவரால் அந்த கோயில் அறங்காவலுக்கு சொந்தமானதுதான் என்று நிரூபிக்கக் கூடிய ஆவணங்களை நீதிமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்காக இவரது வழக்கை ஏற்றுக்கொண்டு கோயில் இயங்க அனுமதி அளித்தால், எல்லோரும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்று காரணம் கூறி ஆக்கிரமிப்புகள் நடத்தும் வாய்ப்புகள் நிறைய உள்ளன" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget