மேலும் அறிய

விளக்கம் கேட்காமலேயே தனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு - எஸ்.பி. வேலுமணி

தன்னுடைய வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காமலேயே தனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் வாதம்

தன்னுடைய வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காமலேயே தனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
 
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கையும், சொத்துக்குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராஜு மற்றும் சித்தார்த் தவே ஆகியோர், தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்தாலும், பொதுப்படையாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
 
உறவினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் வேலுமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உறவினரின்  பணத்தை வேலுமணியின் பணம் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்த வழக்கறிஞர்கள், 2016ல் வேலுமணிக்கு  3 கோடி ரூபாய் சொத்து இருந்ததாகவும், 2021ல் அது 3.3 கோடி ரூபாயாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.
 
வருமானத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்ட முடியாவிட்டால் தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிய முடியும் எனவும், இந்த வழக்கில் வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காத நிலையில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் அவர்கள் வாதிட்டனர்.
 
தொடர்ந்து வழக்கில் புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்டார்.
 
புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.
 
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை வெளியானது எனவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
 
இந்த அறிக்கை குறித்து விசாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், டெண்டர் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை எனவும், தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியலை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்ப கட்டம் தான் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக் கோர முடியாது எனவும் தெளிவுபடுத்தினார்.
 
பின்னர், வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
Trump New Tariff: ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
Embed widget