மேலும் அறிய

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் உயிரிழப்பு...!

’’உணவின் காரணமாக நெருப்புக் கோழிகள் உயிரிழந்ததா என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’’

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளை புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் உயிரிழப்பு...!
 
வண்டலூர் பூங்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக 9 வயதான நீலா, 12 வயதான பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் சிங்கங்களை தனியாக பிரித்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனை அடுத்து சிங்கங்கள் தொடர்ந்து முழுமையாக குணமடைந்தன. இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் வண்டலூர் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்து விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் உயிரிழப்பு...!
 
இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் அக்டோபர் 26 ஆம் தேதி 19 வயதான பெண் சிங்கம் உயிரிழந்தது. அந்த சிங்கம் வயது முதிர்வால் உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 நெருப்புக்கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இதனை அடுத்து நெருப்பு கோழிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் உயிரிழப்பு...!
 
இதுகுறித்து வண்டலூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 19 வயதான கவிதா என்கிற பெண்சிங்கம் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி சிகிச்சை பலனின்றி வயது மூப்பு காரணமாக கவிதா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது.  ஆனால் நேற்று திடீரென்று காலை சில நெருப்பு கோழிகளுக்கு உடல் மோசமானது. இதனையடுத்து நெருப்புக் கோழிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்து 5 நெருப்புக் கோழிகள் உயிரிழந்துள்ளன. இவற்றுக்கு வயது 1.5 வயது முதல் 3 வயது கூடிய நெருப்புக் கோழிகள் ஆகும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் உயிரிழப்பு...!
 
நெருப்பு பொறிகளை உடற்கூறு ஆய்வு செய்ததில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் மறு ஆய்வுக்காக மாதிரிகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவின் காரணமாக நெருப்புக் கோழிகள் உயிரிழந்ததா என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  பல்வேறு கோணங்களில் தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விசாரணை முடிவில் உரிய காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget