மேலும் அறிய

‛யூனிபார்மை கழட்டுவேன்’ போலீசாரை எச்சரித்த பெண் வழக்கறிஞர் முன் ஜாமீன் தள்ளுபடி

சென்னை, சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. முன்னதாக, கடந்த 7-ந் தேதி வரை எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது, சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர் காரில் முகக்கவசம் அணியாமல் வந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார், ஊரடங்கு விதிகளை மீறியதற்காக அந்த பெண்ணிற்கு அபராதமாக ரூபாய் 500 விதிப்பதாக கூறினர். ஆனால், அந்த பெண் அபராதத்தை கட்டாமல் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும்,  அந்த பெண் அவரது தாயாரிடம் போன் செய்து தகவலை கூறினார்.

இதையடுத்து, பி.எம்.டபிள்யூ காரில் சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாயார் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் ஒரு வழக்கறிஞர் என்றும், அபராதம் கட்ட முடியாது என்றும் போலீசாரிடம் ஆத்திரத்துடன் பேசினார். மேலும், போலீசார் முகக்கவசம் அணிந்து பேசுங்கள் என்று கூறியதற்கும் மறுப்பு தெரிவித்ததுடன், `நான் யார்னு காட்டுறேன். மவனே. உன் யூனிபார்மை கழட்டுறேன்… பாக்குறீயா..?’என்று ஒருமையில் பேசினார். இதை வீடியோ எடுத்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பெண் வழக்கறிஞர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.


‛யூனிபார்மை கழட்டுவேன்’ போலீசாரை எச்சரித்த பெண் வழக்கறிஞர் முன் ஜாமீன் தள்ளுபடி

அவர் மீது பொது இடங்களில் அசிங்கமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்றுநோய் பரவல் சட்டம், அரசு உத்தரவை மீறி செயல்படுத்தல், தொற்று நோய் பரப்பக்கூடிய தீய எண்ணத்தில் செயல்படுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் வழக்கறிஞரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், ஊரடங்கு நேரத்தில் ஒரு வழக்கறிஞர் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போலீசாரிடம் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அந்த பெண் வழக்கறிஞரான தனுஜா ராஜா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி செல்வக்குமார் கூறியதாவது, பெண் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் தந்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.


‛யூனிபார்மை கழட்டுவேன்’ போலீசாரை எச்சரித்த பெண் வழக்கறிஞர் முன் ஜாமீன் தள்ளுபடி

அதே பெண் வழக்கறிஞர் தனுஜாராஜா கடந்தாண்டு ஊரடங்கு அமலில் இருந்தபோதும், இதே போன்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதும் வீடியோ ஒன்று மூலம் அம்பலத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget