மேலும் அறிய

நீலாங்கரை அருகே நடுகடலில் சிக்கிய கடலூர் மீனவர்கள் ஹெலிக்காப்டர் உதவி உடன் மீட்பு...!

’’கடலோர பாதுகாப்பு படையினரும், சென்னை மெரினா கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் மீட்பு படகு மற்றும் ஹெலிகாப்டருடன் நடுக்கடலுக்கு விரைந்து நடுக்கடலில் தவித்த 10 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்’’

கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் அன்பு. இவருக்கு சொந்தமான விசைப்படகில், நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த சபரி, செந்தில்குமார், சிங்காரவேல் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை நீலாங்கரை அருகில் சுமார் 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விசைப்படகின் இன்ஜின் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அனைவரும் தீயை அணைக்க முயற்சி செய்து வெகு நேரத்திற்கு பின் அணைத்தனர். இருப்பினும் இன்ஜினில் ஏற்ப்பட்ட நெருப்பினால்  அந்த விசைப்படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது.

நீலாங்கரை அருகே நடுகடலில் சிக்கிய கடலூர் மீனவர்கள் ஹெலிக்காப்டர் உதவி உடன் மீட்பு...!

இதனால் சபரி உள்ளிட்ட 10 பேரும் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தவித்தனர். பின்னர் அவர்கள், உதவி கேட்டு கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். அதன் பேரில் துறைமுகம் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரும், சென்னை மெரினா கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் மீட்பு படகு மற்றும் ஹெலிகாப்டருடன் நடுக்கடலுக்கு விரைந்து சென்றனர். பின்னர் விசைப்படகுடன் நடுக்கடலில் தவித்த 10 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

நீலாங்கரை அருகே நடுகடலில் சிக்கிய கடலூர் மீனவர்கள் ஹெலிக்காப்டர் உதவி உடன் மீட்பு...!

மேலும் பழுதான விசைப்படகை, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தாங்கள் சென்ற கப்பலுடன் கயிறு கட்டி பத்திரமாக கரைக்கு இழுத்து வந்தனர். அதற்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த வருடத்தின் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி  இரண்டு மாதங்கள் அமலில் இருந்தது, அதன்பின் ஜூன் மாதம் 15 ஆம் தேதி தடைக்காலம் முடிந்தப்பின்னும் , தற்பொழுது  கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இழு வலைகளை பயன்படுத்த அதிகாரிகளால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், அதிகளவில் மீன் பிடிக்கும் நோக்கத்தில் கடலூர் மீனவர்கள் சென்னை அருகே சென்றதும், அப்போது தான் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு நடுக்கடலில் தவித்ததும் தெரியவந்தது. 

நீலாங்கரை அருகே நடுகடலில் சிக்கிய கடலூர் மீனவர்கள் ஹெலிக்காப்டர் உதவி உடன் மீட்பு...!

இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் அப்படி பாதிக்கப்பட்டவர்களில் மீனவர்களும் அடங்குவர், அப்படியாக இந்த கொரோனா காலகட்டத்தில் கடலுக்கு செல்லமுடியாமலும் அப்படியே சென்றாலும் அதனை சரியாக விற்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர் இந்த நேரத்தில் இழுவலை மற்றும் சுருக்குமடி வலையினை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தான் மீனவர்கள் இவ்வளவு தொலைவுக்கு சென்று மீன்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget