மேலும் அறிய

ரூ.9000 கோடி அதிர்ச்சி ஓயும் முன்...வராத பணத்திற்கு பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுக் கொடுத்த வங்கி!

Kanchipuram : " வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது,  வேறு ஒருவரின் வங்கி எண் விவரம் மற்றும் அவரது வங்கி கணக்கு விவரம் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர் "

9000 கோடி ரூபாய் பணம்

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆனதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அது தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது தெரிய வந்தது. கடந்த வாரம் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. 


ரூ.9000 கோடி அதிர்ச்சி ஓயும் முன்...வராத பணத்திற்கு பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுக் கொடுத்த வங்கி!

அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 105 ரூபாய் இருந்த நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனை அடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ. 21,000 பணம் அனுப்பிய பிறகு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் அலட்சியத்தால் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது


ரூ.9000 கோடி அதிர்ச்சி ஓயும் முன்...வராத பணத்திற்கு பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுக் கொடுத்த வங்கி!

17 லட்சத்து 96 ஆயிரத்து 101 ரூபாய்
 
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமசிவன் தெரு பகுதியை சேர்ந்தவர் பண்டித விஜயலட்சுமி (55). இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவருக்கு மாதாமாதம் முதியோர் ஓய்வூதியம் வங்கிக் கணக்கு வழியாக செலுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக முதியோர் ஓய்வூதியம் வராமல் இருந்துள்ளது.
 
இதனால் சாலை தெருவில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என வங்கி கணக்கு அட்டையில் வரவு வைத்துள்ளார். அப்பொழுது கடந்த மாதம் 28ஆம் தேதி அவர் வங்கிக் கணக்கிற்கு சுமார் 17 லட்சத்து 96 ஆயிரத்து 101 ரூபாய் வந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது வங்கிக் கணக்கில் எப்படி இவ்வளவு பணம் வந்தது  தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். 

ரூ.9000 கோடி அதிர்ச்சி ஓயும் முன்...வராத பணத்திற்கு பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுக் கொடுத்த வங்கி!
 
இந்த மாதம் 29ஆம் தேதி அதாவது நேற்று அந்த 17 லட்சம் ரூபாய் பணமும் 3 தவணையாக திரும்ப எடுக்கப்பட்டு, வங்கியில் விஜயலட்சுமி வைத்திருந்த சிறிய அளவு பணமும் சேர்த்து எடுத்து, வங்கியின் கையிருப்பு பூஜ்ஜியம் ஆகி உள்ளது.
 
இது குறித்து மூதாட்டி வங்கி தரப்பில் விசாரித்த பொழுது, வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது,  வேறு ஒருவரின் வங்கி எண் விவரம் மற்றும் அவரது வங்கி கணக்கு விவரம் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.
 
இந்த நிலையில் வங்கி நிர்வாகங்கள் அலட்சியமாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget