மேலும் அறிய

“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!

மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவையே முதல்வராக்க பாஜக ஒத்துழைப்பு நல்கும் என்றும்  தேவேந்திர பட்னாவிஸ்க்கு தேசிய அளவில் பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆவதுதான் பிராந்திய கட்சித் தலைவர்களின் மிகப் பெரிய கனவு. அப்படி கிடைத்த முதல்வர் பதவியை விட்டுத் தர யாருக்குதான் மனது வரும் ? மாநிலத்தின் நம்பர் 1 நபராக சர்வ வல்லமை படைத்த அதிகாரம் பலம் கொண்டவராக இருக்கும் முதல்வர் பதவி ஒன்றும் சாதாரண குமாஸ்தா பதவி அல்ல. அது ஒட்டுமொத்த மாநிலத்தை கட்டுப்படுத்து சக்திக் கொண்ட பதவி.

அப்படிப்பட்ட பதவி இந்த முறை மகாராஸ்ட்ராவில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யாருக்கு அதிர்ஷ்டம் ? யாருக்கு வாய்ப்பு ?

நடந்து முடிநெத மஹாராஸ்ட்ரா தேர்தலில் மஹாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆனால், இதுவரை முதல்வர் யார் என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. மஹாயுதி கூட்டணி கட்சிகளுடையே இந்த நேரம் வரை இழுபடி நீடிக்கிறது. மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளீல் ஆளும் பாஜக – சிவசேனா – தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மஹாயுதி கூட்டணி மட்டுமே 233 தொகுதிகளில் வெற்றிப் பெற்று சாதனை படைத்தது.

சிவசேனா கட்சித் தலைவரும் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் தேர்தலில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதனால், அந்த கட்சியை சேர்தவரையே முதல்வராக அறிவிக்க வேண்டும் என அந்த கட்சியினர் விரும்பி, அதற்கான கோரிக்கைகளை கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வந்தனர்.

இதனால், துணை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த தேவேந்திர படனாவிஸை பாஜக முதல்வராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால், சிவசேனா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவையே மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே விட்டுக் கொடுத்துவிட்டால், பாஜக அவரையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.

 

அதே நேரத்தில் இந்த கூட்டணியில் உள்ள தேசியவாத கட்சித் தலைவரான அஜித் பவார், முதல்வர் நாற்காலி போட்டியிலிருந்து தான் ஒதுங்கிக் கொள்வதாகவும் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தார். இதனால், மஹாராஸ்ட்ராவில் முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

ஷிண்டே-வா? அல்லது பட்னாவிஸ்-சா?

இந்நிலையில், பாஜக பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ள நிலையில், முதல்வர் பதவியை ஏன் மற்றொரு கட்சித் தலைவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை பாஜகவினர் எழுப்பி வருகின்றனர். இதனால், துணை முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பாஜக தேசிய தலைமை ஆதரவளித்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பேச வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், ஷிண்டே தரப்பு முதல்வர் நாற்காலியை விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இல்லை. இதனால், பீகாரில் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை பாஜக கூட்டணி அளித்தததுபோல், ஏக்நாத் ஷிண்டேவிற்கும் அந்த மரியாதையை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சிவசேனா கட்சி தரப்பில் வலுத்து வருகிறது.

இன்று முடிவு எடுத்தாக வேண்டும்..?

மஹாராஸ்ட்ரா அரசின் பதவி காலம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய முதல்வரை அறிவித்து ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் மாஹாயுதி கூட்டணி இருக்கிறது.

எனவே, இன்றே அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டு, முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும், மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவையே முதல்வராக்க பாஜக ஒத்துழைப்பு நல்கும் என்றும்  தேவேந்திர பட்னாவிஸ்க்கு தேசிய அளவில் பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தலைவர் பதவி முடிவடைந்துள்ள நிலையில், புதிய பாஜக தேசிய தலைவராக கூட தேவேந்திரபட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
Xiaomi Offer: ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
Xiaomi Offer: ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
Captain Prabhakaran: கூலி எல்லாம் ஓரம்போ.. ரீ ரிலீஸில் கேப்டன் பிரபாகரன் வசூல் மழை.. மாஸ் காட்டும் விஜயகாந்த்!
Captain Prabhakaran: கூலி எல்லாம் ஓரம்போ.. ரீ ரிலீஸில் கேப்டன் பிரபாகரன் வசூல் மழை.. மாஸ் காட்டும் விஜயகாந்த்!
Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
Embed widget