மேலும் அறிய

Telegram App மூலம் தொடர்பு !! அரசு பணி ஆசை காட்டி இளம் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை

செல்போன் செயலி மூலம் அறிமுகமாகி அரசு தேர்வுக்கு உதவி செய்வதாக கூறி மிரட்டி , உறவு வைத்துக் கொண்ட நபர் கைது

Telegram App மூலம் தொடர்பு !! அரசு பணி ஆசை காட்டி , மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், சென்னையில் சுமார் 4 மாதங்களாக தங்கி அரசு பணி (UPSC) தேர்வுக்காக படித்து வருவதாகவும், அப்பொழுது டெலிகிராம் செல்போன் செயலி மூலம் வீடு வாடகைக்கு தேடி வந்துள்ளார்.

டெலிகிராம் செல்போன் செயலியிலிருந்து பேசிய ஒரு நபர் தனது பெயர் ஹரிஷ்குமார் என்றும், வீடு வாடகைக்கு தேடுகிறீர்களா என கேட்டு, தானும் UPSC தேர்வுக்காக 3 வருடங்களாக படித்து வருவதாகவும் நேர்முக தேர்வு வரை சென்றுள்ளதாகவும் , உங்களுக்கும் அரசு பணி தேர்வுக்கு உதவுவதாக கூறி பேசி வந்துள்ளார்.

பின்னர் ஒரு நாள் , பெண்ணின் புகைப்படத்தை அனுப்ப சொல்லி கூறியுள்ளார். அனுப்பவில்லை என்றால் உனது பெற்றோருக்கு தெரிவிப்பதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் அப்பெண் அவரது புகைப்படத்தை அனுப்பியதாகவும், பின்னர் சில நாட்கள் கழித்து என்னுடன் வெளியே வர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

10.12.2025 அன்று ஆட்டோவில் அழைத்துச் சென்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து மிரட்டி தன்னுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த யோகேஷ்குமார் ( வயது 23 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

விசாரணையில் , யோகேஷ்குமார் மீது ஏற்கனவே தேனி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் ஒரு வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட யோகேஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலை பார்த்த வீட்டில் நகையை திருடிய பெண்மணி கைது.

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் குடும்பத்துடன் வசித்து வரும் அஜய் அய்யப்பன் ( வயது 40 ) என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்  இவரது 2 குழந்தைகளை பார்த்துக் கொள்ள தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் செண்பகம் ( வயது 43 ) என்பவர் சுமார் 1 வருடமாக வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 26.11.2025 அன்று அஜய் அய்யப்பன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது, குழந்தையின் தங்கச் சங்கிலி மற்றும் மனைவியின் தங்கச் சங்கிலிகள் என சுமார் 41.5 கிராம் எடை கொண்ட 3 தங்கச் சங்கிலிகள் காணவில்லை எனவும், மேற்படி வேலைக்கார பெண் செண்பகம் மீது சந்தேகம் உள்ளதாகவும் அஜய் அய்யப்பன் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் , போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததில், மேற்படி வேலைக்கார பெண்மணி செண்பகம் புகார் தாரர் வீட்டில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடிச் சென்று அடகு வைத்துள்ளதும் தெரிய வந்தது.

அதன் பேரில், காவல் குழுவினர் திருட்டில் ஈடுபட்ட செண்பகம் ( வயது 43 ) என்பவரை கடந்த 11.12.2025 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 41.5 கிராம் எடை கொண்ட 3 தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட செண்பகம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget