மேலும் அறிய

Driverless Metro Rail: அடி தூள்.. ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்; தயாரிப்பு ஒப்பந்தம் போட்ட CMRL

சென்னை மேட்ரோ ரயில் நிறுவனம், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க, சுமார் ரூ.1,538 கோடியில் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ரயில்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் தெரியுமா.?

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்காக 1,538.35 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ரயில்களின் தயாரிப்பு எப்போது முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த விவரங்களை தற்போது காணலாம்.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக, Alstom Transport India நிறுவனத்துடன், 1,538.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான ஏற்புக் கடிதம், கடந்த ஏப்ரல் 28-ம் தேதியன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில், அதன் இயக்குநர் மனோஜ் கோயல்(அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ரயில்களின் தயாரிப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன்(மெட்ரோ இரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் பி. தியாகராஜன், பொது ஆலோசகர் AEON மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

ஒப்பந்தத்தில் என்னென்ன விஷயங்கள் அடங்கும்.?

இந்த ஒப்பந்தத்தில், ரயில்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு ஆகியவை அடங்கிய ஒட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.

ஓட்டுநர் இல்லா ரயிலின் சேவை எப்போது தொடங்கும்.?

இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில், வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து, 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாமல் ரயிலை இயக்குவதற்கான சோதனைகள் நடத்தப்படும். இந்த சோதனையில், பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் சேவை சோதனைகளும் அடங்கும். இந்த சோதனைகள் முடிந்த பின்னர், மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும், 2027 செப்டம்பர் முதல் 2028 மே மாதம் வரை, ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், 2-ம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்கான 3-வது மற்றும் இறுதி ஒப்பந்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், வரும் 2028-ம் ஆண்டின் இறுதியில், ஓட்டுநர் இல்லா ரயிலின் சேவை தொடங்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Embed widget