CM Stalin - O Panneerselvam: ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்: காரணம் இதுதான்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு, சென்னையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக பிப்.24 ஆம் தேதி காலமானார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவானது ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
முதலமைச்சர் நேரில் ஆறுதல்:
அப்போது, “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன்சென்று ஓபிஎஸ்-க்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















