Chennai Wonderla: எல்லோரும் ஓரம் போங்க.. லண்டனுக்கு டப் கொடுக்கும் சென்னை வொண்டர்லா.. டிசம்பரில் இன்ப அதிர்ச்சி..!
Chennai Wonderla Amusement Park: சென்னை புறநகர் பகுதியில் அமைய உள்ள முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக, சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Wonderla Theme Park : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, தமிழ்நாட்டின் முதல் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது.
இந்தியாவில் வொண்டர்லா தீம் பார்க் (Wonderla Amusement Park)
சமீப காலமாக பொதுமக்களுக்கு, சுற்றுலா மீது அதிக அளவு ஆர்வம் ஏற்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகளுடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று, வருவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதியில், பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கோடைகாலம் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தினமும் படையெடுத்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் பொழுதுபோக்கு பூங்கா கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு மக்களிடம் இருக்கும் பெரும் ஆதரவு, பல கோடி ரூபாயை முதலீடு செய்ய நிறுவனங்களை தூண்டுகிறது. அந்த வகையில், இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா (Wonderla Amusement Park) தீம் பார்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர்.
சென்னையில் வொண்டர்லா தீம் பார்க்
பெங்களூரில் இருக்கும் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையில் அந்த நிறுவனம் இறங்கியது. இதற்காக தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. தொடர்ந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, வொண்டர்லா பூங்கா தொடர்பான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதற்குப் பின்னணியில் நிர்வாக சிக்கல் காரணம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
சுற்றுலாத்துறையில் நடைபெற்ற மாற்றம்
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் அமைக்கும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி அனுமதி வழங்கப்படும் என கொள்கையை அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், டிஸ்னி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ போன்ற உலக அளவில் இருக்கும் மிக முன்னணி, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்களை சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா மீண்டும் புத்துயிர் பெற்றது. தொடர்ந்து உடனடியாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
சென்னை வொண்டர்லா எங்கு அமைகிறது ? Chennai Wonderla Theme Park Location
வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் கிளையை தொடங்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில், மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.
லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் 80 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா எப்போது ? Chennai Wonderla Theme Park Opening Date
தற்போது இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான இறுதி கட்டப் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணி வெற்றிகரமாக முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய சூழலைப் பொறுத்தவரை 70 சதவீத பணிகள் முழுமை அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் விடுமுறை நாட்களின்போது, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி திறப்பதற்கான அனைத்து கூறுகளும் இருப்பதாக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.





















