மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி ; மது தகராறில் வாலிபர் கற்கள் மற்றும் பீர்பாட்டிலால் தாக்கி கொடூர கொலை

மது போதையில் கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் இளைஞர் மீது நண்பர்கள் தாக்குதல்

பலத்த காயங்களுடன் இளைஞர் உடல்

சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி யு.பிளாக்கில் உள்ள பூங்காவில் உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் மயங்கி கிடப்பதாக பெரும்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தவர் பெரும்பாக்கம் எழில் நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு உடனடியாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளி

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், கார்த்திகேயன் பழைய குற்றவாளி என்பதும், ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதும் தெரிய வந்தது.

மேலும் சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் குமார், விஜயகுமார், சரத் என்ற சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் பார்க்கில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அவர்களை தேடினர். அதே பகுதியில் மறைந்திருந்த குமார் (வயது 27), விஜயகுமார் (வயது 28), சரத் என்ற சரத்குமார் (வயது 35), சரண்ராஜ் என்ற கோகுல் (வயது 29), கார்த்திக் (வயது 26) ஆகிய 5 பேரையும் தனிப் படையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பணம் இல்லை - சட்டை பாக்கெட் கிழிப்பு

இதில், இவர்கள் குடியிருக்கும் பகுதியில் பாபு என்பவர் இறந்து விட்டார். இவரது சாவில் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் மது குடித்து விட்டு டான்ஸ் ஆடியுள்ளனர். போதை இறங்கிய நிலையில் கார்த்திகேயன் மீண்டும் மதுகுடிக்க குமாரிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால், கார்த்திகேயன், குமார் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, குமாரின் சட்டை பாக்கெட் கிழிந்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. குமார் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து அன்றிரவு நண்பர்களான விஜயகுமார், சரத் என்ற சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து கார்த்திகேயனை தேடியுள்ளனர்.

கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்குதல்

கார்த்திகேயன் யூ பிளாக் பகுதியில் உள்ள பார்க்கில் மது அருந்தி கொண்டிருந்தது தெரிய வந்தது. அங்கு சென்றவர்கள் கார்த்திகேயனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, கார்த்திகேயன் வைத்திருந்த மதுபாட்டிலால் 5 பேரையும் தாக்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த 5 பேரும் சேர்ந்து பீர்பாட்டில் மற்றும் கல்லால் கார்த்திகேயனை சரமாரி தாக்கியுள்ளனர். மயங்கி கீழே விழுந்ததும் பெரிய கல்லால் சரமாரி தாக்கி விட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சொத்து வாங்கும் போது கருப்புப் பணத்தை தவிர்ப்பது எப்படி ? ரொக்கப் பணத்தை தவிர்ப்பது அவசியம்
சொத்து வாங்கும் போது கருப்புப் பணத்தை தவிர்ப்பது எப்படி ? ரொக்கப் பணத்தை தவிர்ப்பது அவசியம்
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
Chennai Metro: சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு! நந்தனம் நுழைவாயில் மூடல் - மாற்று வழிகள் இதோ
Chennai Metro: சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு! நந்தனம் நுழைவாயில் மூடல் - மாற்று வழிகள் இதோ
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Missile Stuns World: உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்
உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா, பிரிட்டன்
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Tata Cars Price Hike 2026: நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
Puducherry Assembly Election : வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாளே அவகாசம் – NDA வேட்பாளர்கள் அறிவிப்பு; இண்டியா கூட்டணியில் தொடரும் இழுபறி!
Puducherry Assembly Election : வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாளே அவகாசம் – NDA வேட்பாளர்கள் அறிவிப்பு; இண்டியா கூட்டணியில் தொடரும் இழுபறி!
Duster 1.3 Turbo Petrol Review: ஸ்டைல் மட்டும் போதுமா.? புதிய ரெனால்ட் டஸ்டர் 1.3 டர்போ பெட்ரோல் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? ரிவ்யூவ்
ஸ்டைல் மட்டும் போதுமா.? புதிய ரெனால்ட் டஸ்டர் 1.3 டர்போ பெட்ரோல் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? ரிவ்யூவ்
Iran Rejects Trump's Offers: “உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
Embed widget