மேலும் அறிய

Chennai: 17 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை! கணவன் மீது பாய்ந்த வழக்கு!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை கொடுத்த கணவன் மீது 4 பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுமதி. இவர்களது 17 வயது மகளுக்கு, அதே பகுதியை சேர்ந்தவர் 28 வயதான முருகனை கடந்த ஆண்டு, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர், அவர்கள் அதே பகுதியில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

கடந்த மாதம் 25ம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போது, மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. உடனே இது பற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், 16 வயதில் அச்சிறுமிக்கு திருமணம் நடந்ததும், தற்போது குழந்தை பிறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் கணவர் முருகன் மீது போக்சோ உட்பட 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுடைய பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த 5 பேரும் தலைமறைவாகினர்.

கடந்த 2 தினங்களுக்கு முன், எழும்பூர் அரசு மருத் துவமனையில், 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் கணவர் பிரகாஷ் (25) மீது, போக்சோ உட்பட4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, இவர்களுடைய பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல், கடந்த மே மாதம் 20 ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பெண் ஒருவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து பிரசவித்த பெண் மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் விவரங்களை சேகரித்ததில் அந்த பெண் 17 வயது சிறுமி என்று அறிந்ததும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குறித்து மேலும் சில  விவரங்கள் கேட்டபோது அந்த சிறுமியால் எதுவும் சொல்ல தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்யமுடியாமல் காவல்துறையினர் தவித்தனர். அதன் பின்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் லாபகமாக விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும், தனக்கும் இரு வீட்டார் முன்னிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் முகப்பேரில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்ததாகவும், அந்த சிறுமி தனது கணவர் சதீஷ்குமார் தற்போது அம்பத்தூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

chennai : 17-year-old girl birth in girl baby govt hospital maternity ward husband arrest

பின்னர் சிறுமி வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறைக்கு ஒப்படைக்க, மனைவிக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக கூறி சதீஷ்குமாரை காவல்துறையினர் வரவழைத்தனர்.

தனது மனைவிக்கு பாப்பா பொறந்திருக்கு என்று மகிழ்ச்சியுடன் சாக்லேட் வாங்கிவந்த சதீஷ்குமாரை மடக்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மனைவியை திருமணம் செய்தவதற்கு முன்புதான்  பெண்ணின் வயது தனக்கு தெரியாது என்றும், திருமணத்திற்கு பின்புதான் அவர் 17 வயது சிறுமி என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார். 

ஆதார் அட்டை அடிப்படையில் சிறுமிக்கு திருமணத்தின் போது 16 வயது என்றும் தற்போது 17 வயது என்பதையும் உறுதிப்படுத்திய போலீசார் சதீஷ்குமாரை கைது செய்ய சட்ட ஒப்புதல் பெற்றனர். தொடர்ந்து, வயது பூர்த்தியாகாத மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய குற்றத்திற்காக சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  மேலும், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ்குமார் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget