Chennai Power Shutdown: சென்னை மக்களே அலர்ட்! வீக் எண்ட்டிலும் பவர் கட்... எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown : சென்னையில் நாளை 25-05-2025 அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் மின்தடை செய்யப்பட உள்ளது

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 25.05.2025
இந்நிலையில், நாளை(25,05.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் பி -பிளாக், நியூ டைனி செக்டர், 2வது பிரதான பகுதி, சி.டி.எச்., சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மென்ட், பழைய டைனி செக்டர் ஒன்றாவது பிரதான சாலை, ஏ.டி.சி., சாலை, 2வது குறுக்கு தெரு, 3வது தெரு செக்டார்-, கோரமெண்டல் டவுன்,7வது தெரு செக்டர் 3,ஆவின் சாலை சில பகுதிகள் , சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு, 7வது மற்றும் 8வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம், குக்சன் சாலை, ஆகிய பகுதிகளில் நாளை மின்தடைசெய்யப்படும்.
சென்னையில் எவ்வளவு நேரம் மின்தடை இருக்கும் ?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்கு முன் முடிவடைந்தால் மின் விநியோகம் வழங்கப்ப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















