Chennai Power Shutdown: ஜனவரி 24-ம் தேதி சென்னைல எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? விவரங்கள் இதோ
Chennai Power Cut(24-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 24-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம்
- தேவி நகர்
- ஆவின் எம்எம்சி
- வெங்கடேஸ்வரா நகர் 10-வது, 11-வது தெரு
- அருள் நகர் 1-வது தெரு முதல் 5-வது தெரு
- பேங்க் காலனி 1-வது முதல் 5-வது தெரு
- கணபதி தெரு 1-வது முதல் 5-வது தெரு
- ஜான் வாசு தெரு
- சரோஜினி நகர்
- விஎஸ் மணி நகர்
- ஜெயலட்சுமி கார்டன்
- மாடசாமி நகர்
- மாரி தெரு
- பின்னி காலனி
- அன்னை இந்திரா நகர்
- நேதாஜி தெரு
- வேணு தெரு
- பாரதி தெரு
- VOC தெரு
- அறிஞர் அண்ணா நகர்
- மூலச்சத்திரம் மெயின் ரோடு
- VNG நகர்
- ஐஸ்வர்யா நகர்
- பெருமாள் கோயில் தெரு
- துரை கண்ணு தெரு
- அய்யனார் தெரு
- வரதன் நகர்
- துரை அம்மாள் நகர்
- மூர்த்தி கார்டன்
- சுபம் நகர்
- பார்வதி நகர்
குன்றத்தூர்
- பல்லாவரம் மெயின் ரோடு
- மணிகண்டன் நகர்
- மெட்ரோ ஸ்டார் சிட்டி
- மெட்ரோ ஹைடெக் சிட்டி
- விஷால் நகர்
- அன்னை தெரசா நகர்
- பி.டாட் ஜி.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















