மேலும் அறிய

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்

Poonamallee Porur Metro Issue: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் நடைபெற்று வரும் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையிலான சோதனை ஓட்டத்தின்போது மின்கம்பியில் தீப்பற்றியதால் , ரயில் நிறுத்தம் செய்யப்பட்டது.

பூந்தமல்லி மற்றும் போரூர் இடையிலான 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தின்போது, மின்கம்பியில் தீப்பற்றியதால், சோதனை ஓட்டமானது நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ:

சென்னை புறநகர் பகுதியில் , 2 ஆம் கட்ட மெட்ரோ பணியானது நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி மற்றும் போரூர் இடையில் நடைபெற்று வரும்  நிலையில், மெட்ரோ கட்டுமான பணியானது 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மெட்ரோ கட்டுமான பணி நிறைவடைந்து, வரும் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று இப்பகுதிக்கு இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. 


Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்

                           படம் : மின் கம்பியில் தீப்பற்றிய காட்சி:

சோதனை ஓட்டம் நிறுத்தம்:

ஆனால், இப்பகுதியில் திடீரென மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆட்கள் இல்லாத மெட்ரோ ரயிலை பூந்தமல்லியில் இயக்கிய போது, சுமார் 2 கி.மீ தொலைவில் தீ பற்றிய நிகழ்வானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், உடனடியாக இப்பகுதியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமானது இயக்கமானது நிறுத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்பகுதியில் மின்சார கம்பியில் என்ன பிரச்னை என்பதை மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில் புறநகர் பகுதியான பூந்தமல்லி மற்றும் சென்னை மெரினா கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

Also Read: ஹைப்பர்லூப் ரயில் ரெம்பா ஸ்பீடா இருக்கும்! சென்னை ஐஐடி_க்கு நிதி ஒதுக்கீடு- ரயில்வே அமைச்சகம் அப்டேட்

சென்னை 2ம் கட்டம் மெட்ரோ:

ஏற்கனவே, குமணஞ்சாவடி மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையிலான 1.2 கி.மீ நீளமுள்ள பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனைக்கு இடையிலான பாதையில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில், இன்று மாலை பூந்தமல்லி மற்றும் போரூர் இடையிலான 2.5 கி.மீ பகுதியில் சோதனை ஓட்டமானது நடைபெற திட்டமிடப்பட்டது. அப்போது, ரயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மின்கம்பியில் தீப்பற்றியது. உடனே மெட்ரோ நிர்வாகம் சோதனை ஓட்டத்தை நிறுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உடனடியாக , மின் கம்பியில் ஏற்பட்ட பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட்டு , மீண்டும் விரைவியில் சோதனை ஓட்டமானது நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget