மேலும் அறிய

Guindy Flyover: மாறப்போகும் கிண்டி.. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.. ரூ.20 கோடியில் மேம்பாலம்.. சிறப்பம்சங்கள் என்ன ?

Guindy Flyover: சென்னை கிண்டியில் 20.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பஸ்-ரயில் நிலையங்களை இணைக்க நடைமேம்பாலம் அமைய உள்ளது.

சென்னை மாநகரின் மிக முக்கிய பகுதியாக கிண்டி இருந்து வருகிறது. கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை, கிண்டி மின்சார ரயில் நிலையம், கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை எப்போதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதிகளாக இருந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல், ஏற்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. காலை மற்றும் மாலை வேலை மட்டும் இல்லாமல், எப்போதுமே இந்த இடம் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. 

அண்ணா சாலை, அடையாறு பகுதியில் இருந்து தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு நோக்கி செல்லும் பேருந்துகள் கிண்டி ரயில் நிலையம் அண்ணாசாலை சந்திப்பு வழியாக செல்கின்றன. மெட்ரோ பண்ணிக்காக திருப்பி விடப்பட்ட பேருந்துகள், தற்போதும் அதே வழியில் சென்று கொண்டிருக்கிறன. ரேஸ் கோர்ஸ் சாலை மிகவும் குறுகிய சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு 

இந்த நிலையில் பேருந்து பயணிகள், மின்ஸ் புறநகர் மின்சார ரயில் பயணிகள் மற்றும் மெட்ரோ ரயில், நிலையங்களுக்கு செல்லும் வகையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பேருந்து நிலையம் சாலை, 100 அடி அகலமாக மாற்றவும் மாநகராட்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

 20.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 

மாநில கட்டமைப்பு நிதி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிதியிலிருந்து 20.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையை, ஒட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் குறுகிய சாலை இருப்பதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இந்த பகுதியை கடக்கும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

எனவே, பயணிகளின் சிரமத்தை போக்க 20.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரேஸ் கோர்ஸ் சாலை விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படுகிறது. இதனால் விரைவில் ஆக்கிரமிப்பாகட்டும் பணிகள் நடைபெற உள்ளன. ரேஸ் கோர்ஸ் சந்திப்பில் ஏறினால் அண்ணா சாலையில் இறங்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அம்சங்கள் என்னென்ன ?

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தாளம் அமைக்கப்பட உள்ளது. அதே போன்று மின் தூக்கி மற்றும் கட்டிடக்கலை அலங்கார விளக்குகள் போன்ற வசதிகளும் அமைக்கப்பட உள்ளன. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி அமைக்கப்பட உள்ளன. குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் செல்ல தனி கட்டமைப்பும் வசதிகள் செய்யப்பட உள்ளன. 

இதேபோன்று சென்னையில் அமைய உள்ள இயற்கை எரிவாயு செல்லும் தனிக் குழாயும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடை மேம்பாலத்தின் நீளம் 300 மீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. அமைய உள்ள சாலையின் நீளம் 900 மீட்டர். சாலையின் அகலம் 100 அடியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. மின்வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் மற்றும் மின் தூக்கி உள்ளிட்ட வசதிகளும் அமைய உள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget