மேலும் அறிய

சென்னை: பெரம்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் பாதுகாப்பாக மீட்பு

தொடர் மழையால் கட்டிடத்தில் நீர் தேங்கியதால் அந்த ஈரப்பதம் ஆனது கட்டிடத்தின் உள்ளே ஊடுருவி கலவையானது சரிவர இறுக்கமாக பிடிமானம் இல்லாததால் கட்டிடத்தின் பால்கனி இடிந்ததாக தகவல்

சென்னை பெரம்பூர் செம்பியம் சபாபதி முதலி தெருவில் சுமார் பத்து குடும்பங்கள் ஒரே கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். ராஜேஷ், சக்திவேல், ஞானசேகர் ஆகியோருக்கு சொந்தமான இந்த வீட்டில் கீழ்த்தளத்தில் வீட்டு உரிமையாளர்களும் முதல் மாடியில் மூன்று வாடகைதாரர்களும் இரண்டாவது மாடியில் இரண்டு வாடகைதாரர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது பணிகளை முடித்துக் கொண்டு சில பேர் வழக்கம் போல் வேலைக்கு சென்று உள்ளனர். இன்று காலை சுமார் 12 மணி அளவில் கட்டிடத்தின் இரண்டாவது  தளத்தில் உள்ள பால்கனி சுவர் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இடிந்து கீழே விழுந்தது.
 

சென்னை: பெரம்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் பாதுகாப்பாக மீட்பு
 
இதனால் வீட்டிலிருந்த நபர்கள் அலரி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார்  உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர்   காயம் அடைந்தவர்கள் மற்றும் மயக்கம் அடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காயமடைந்த சுதா, மோகனா, ஜெயலட்சுமி என்ற மூன்று பெண்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம் சமீபத்தில் மூன்று மாத காலத்திற்கு முன்னர் தான் புதுப்பிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டிடத்தில் நீர் தேங்கியதால் அந்த ஈரப்பதம் ஆனது கட்டிடத்தின் உள்ளே ஊடுருவி கலவையானது சரிவர இறுக்கமாக பிடிமானம் இல்லாததால் கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் திடீர் தீ
 
சென்னை கொடுங்கையூர் காந்தி நகர் முதல் தெரு பகுதியில் வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வந்து விசாரணை செய்த போது ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு கார் தீயில்  எரிந்து நாசமாகி இருந்தது. போலீசாரின் விசாரணையில் கொடுங்கையூர் காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்த பாஸ்கர் (47) இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார்.
 
சென்னை: பெரம்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் பாதுகாப்பாக மீட்பு
 
இவர் இரவில் வழக்கம் போல வீட்டின் வெளியே தனது காரை விட்டு சென்றுள்ளார். இதே போல அதே பகுதியில் குடியிருக்கும் மற்றொரு நபரும் இருசக்கர வாகனத்தை காரின் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திடீரென கார் மற்றும் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தனர். 

சென்னை: பெரம்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் பாதுகாப்பாக மீட்பு
 
வீட்டிலிருந்து இறங்கி வந்த பாஸ்கர் மற்றும் அருகிலிருந்தவர்கள் சேர்ந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது காரின் முன்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசம் ஆயின தற்போது மழை பெய்து அனைத்துப் பகுதிகளும் ஈரமாக இருப்பதால் தீ விபத்துக்கான காரணம் நாச வேலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget