![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தாய்ப்பால் கொடுக்கும்போது கவனம்: மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு...! கதறி அழுத தாய்
சென்னை அண்ணா நகரில் தாய்ப்பால் குடித்து மூன்றரை மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![தாய்ப்பால் கொடுக்கும்போது கவனம்: மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு...! கதறி அழுத தாய் chennai : A three-and-a-half-month-old baby died of suffocation after drinking breast milk தாய்ப்பால் கொடுக்கும்போது கவனம்: மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு...! கதறி அழுத தாய்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/02/fa43374147a9c66e4fb8a044d58f50f21659419720_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அண்ணா நகரில் தாய்ப்பால் குடித்து மூன்றரை மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகர், 3வது தெருவை சேர்ந்தவர் 32 வயதான எழிலரசன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி 26 வயதான சவுமியாஸ்ரீ தங்களது பார்த்து கொண்டு இல்லதரசியாக இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூன்றரை மாதமான தேஜாஸ் ஆண் குழந்தையும் உள்ளது.
நேற்று முன்தினம் சவுமியாஸ்ரீ, தனது குழந்தை தேஜாஸ்க்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்தார். சிறிது நேரம் கழித்து, தனது வேலைகளை முடித்து விட்டு, தூங்கி கொண்டிருந்த குழந்தை தேஜாஸை பார்த்தபோது, மூச்சு பேச்சின்றி இருந்தது. குழந்தையை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சவுமியாஸ்ரீ கதறி அழுதுள்ளார்.
சவுமியாஸ்ரீயின் அழுகும் சத்தம் கேட்டு விரைந்து வந்த குடும்பத்தினர், குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து டாக்டர்கள் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், தாய்ப்பால் புகட்டிய உடனே குழந்தையை தூங்க வைத்ததால், மூச்சு, திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தது தெரியவந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாய்ப்பால் குடித்து விட்டு தூங்கிய மூன்றரை மாத குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)